சோமநாதர் கோயில் வரலாறை மறைக்கும் முயற்சி முறியடிப்பு: மோடி

சுயமரியாதை பெருவிழாவில் தகவல்
சோமநாதர் கோயில் வரலாறை மறைக்கும் முயற்சி முறியடிப்பு: மோடி
Updated on
2 min read

அகமதாபாத்: சோம​நாதர் கோயில் வரலாறை மறைக்க முயற்சி நடை​பெற்​ற​தாக​வும் அது முறியடிக்​கப்​ பட்​ட​தாக​வும் பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

குஜ​ராத்​தின் கிர்​சோம்​நாத் மாவட்​டம், பிர​பாச பட்​டினம் கடற்​கரை​யில் சோம​நாதர் கோயில் அமைந்​துள்​ளது. 1,026-ல் கஜினி முகமது நடத்​திய தாக்​குதலுக்​குப் பிறகு 1,000 ஆண்​டு​களைக் கடந்து சோம​நாதர் கோயில் கம்​பீர​மாக நிற்​கிறது. இதை நினை​வு​கூரும் வகை​யில் கடந்த 8-ம் தேதி சோம​நாதர் சுயமரி​யாதை பெரு​விழா தொடங்​கியது.

இவ்​விழா​வில் பங்​கேற்க பிரதமர் மோடி நேற்று முன்​தினம் சோம​நாதர் கோயிலுக்கு சென்​றார். நேற்று காலை​யில் கோயி​லில் அவர் வழி​பாடு நடத்​தி​னார். இதையடுத்​து, நடை​பெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசி​ய​தாவது: சோம​நாதரின் வரலாறு என்​பது அழிவு மற்​றும் தோல்​வியைப் பற்​றியது அல்ல, மாறாக வெற்றி மற்றும் மறுமலர்ச்​சி​யைப் பற்​றியது.

அடிப்​படை​வாத படையெடுப்​பாளர்​கள் இப்​போது வரலாற்​றின் பக்​கங்​களாகச் சுருங்​கி​விட்​டனர். ஆனால் சோம​நாதர் கோயில் இன்​றும் கம்​பீர​மாக நிற்​கிறது. இது​தான் கால சுழற்​சி. சோம​நாதர் கோயிலை அழிக்க பலமுறை முயற்​சிகள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அதைத் தடுத்​ததுடன், அதன் பண்​டைய காலப் பெரு​மையை மீட்டெடுப்​ப​தற்​கான உறு​திப்​பாடு மற்​றும் முயற்​சிகளால், இன்று மன உறு​தி, நம்​பிக்கை மற்​றும் தேசி​யப் பெரு​மை​யின் சக்​தி​வாய்ந்த அடை​யாள​மாகத் திகழ்​கிறது.

வெறுப்​பு, அட்​டூழி​யம் மற்​றும் தீவிர​வாதத்​தின் உண்​மை​யான வரலாறு நம்​மிட​மிருந்து மறைக்​கப்​பட்​டது. இந்​தத் தாக்​குதல் கோயிலைக் கொள்​ளை​யடிக்​கும் முயற்சி என்று மட்​டுமே நமக்​குக் கற்​பிக்​கப்​பட்​டது. சுதந்​திரத்​துக்​குப் பிறகு, சர்​தார் வல்​லப​பாய் படேல் சோம​நாதர் கோயிலை மீண்​டும் கட்ட உறு​தி​மொழி எடுத்​தார்.

அப்​போது, அதற்கு சிலர் தடையை ஏற்​படுத்​தினர். எனினும், 1951ல் மறுநிர்​மானம் செய்​யப்​பட்​டது. ஒரு குறிப்​பிட்ட தரப்​பினரை திருப்​திப்​படுத்​தும் அரசி​யலில் ஈடு​பட்​ட​வர்​கள், இத்தகைய தீவிர​வாத மனப்​போக்கு கொண்​ட​வர்​களிடம் மண்டியிட்​டனர். சோம​நாதர் கோயிலை மீண்​டும் கட்​டு​வதைத் தடுக்க முயன்ற அந்​தச் சக்​தி​கள் இன்​றும் நம்​மிடையே உள்​ளன. அத்​தகைய சக்​தி​களைத் தோற்​கடிக்க நாம் விழிப்​புட​னும், ஒற்றுமை​யுட​னும், வலிமை​யுட​னும் இருக்க வேண்​டும்.

இந்​தத் திருத்​தலத்​தைப் போல​வே, வெளி​நாட்​டுப் படையெடுப்​பாளர்​கள் பல முறை இந்​தி​யாவை அழிக்க முயன்​றனர். இந்​தத் திருத்​தலத்தை அழிப்​ப​தன் மூலம் தாங்​கள் வெற்றி பெற்​று​விட்​ட​தாக படையெடுப்​பாளர்​கள் கரு​தினர். ஆனால் 1,000 ஆண்​டு​களுக்​குப் பிறகும், சோம​நாதர் கொடி இன்​றும் பறந்து கொண்​டிருக்​கிறது. இந்த 1,000 ஆண்டு காலப் போராட்​டத்​துக்கு உலக வரலாற்​றில் இணையே இல்​லை. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

இதற்கிடையே கலைஞர்கள் செண்டை மேளம் அடித்து பிரதமர் மோடியை வரவேற்றனர். அப்போது அவர் ஒரு கலைஞரின் மேளத்தில் உற்சாகமாக அடித்தார்.

ட்ரோன் காட்சி: பெரு​விழாவை முன்​னிட்டு நேற்று முன்​தினம் இரவு 3,000 ட்ரோன்களின் காட்சி பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்​றது. அதில் சிவபெரு​மானின் உரு​வம், சிவலிங்​கம் மற்​றும் சோம​நாதர் கோயி​லின் முப்​பரி​மாண வடிவம் உள்​ளிட்ட பல வடிவங்​கள் விண்ணில் ஒளிர்ந்​தன.

சர்​தார் படேல் மற்​றும் வீர் ஹமிர்ஜி கோகில் ஆகியோரின் உருவங்​களும் சித்​தரிக்​கப்​பட்டன. அத்​துடன் பிரதமர் மோடி​யின் உரு​வ​மும் வானில் சித்​தரிக்​கப்​பட்​டது. 16-ம் நூற்​றாண்​டில் வாழ்ந்த ராஜபுத்​திர வீர​ரான வீர் ஹமிர்ஜி கோகில், சோம​நாதர் கோயிலைப் பாது​காக்​கத்​ தனது உயிரைத்​ தி​யாகம்​ செய்​தவர்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

சோமநாதர் கோயில் வரலாறை மறைக்கும் முயற்சி முறியடிப்பு: மோடி
பிடிஆரை எதிர்த்து நிற்க பிரியப்படும் பாஜக! - மதுரை மத்திக்கு அதிமுகவிடம் ‘விருப்ப மனு’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in