குஜராத்தின் சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

குஜராத்தின் சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
Updated on
1 min read

அகமதாபாத்: குஜ​ராத்​தின் சோம​நாதர் கோயி​லில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழி​பாடு நடத்​தி​னார்.

குஜ​ராத்​தின் கிர்​சோம்​நாத் மாவட்​டம், பிர​பாச பட்​டினம் கடற்​கரை​யில் சோம​நாதர் கோயில் அமைந்​துள்​ளது. கடந்த 1026-ம் ஆண்டு கஜினி முகமது இந்த கோயில் மீது தாக்​குதல் நடத்தி ஏராள​மான செல்​வங்​களை கொள்​ளை​யடித்து சென்​றார். அதன்​பிறகு முகலாய ஆட்​சி​யாளர்​களால் கோம​நாதர் கோயில் பலமுறை தாக்​கப்​பட்​டது. நாடு சுதந்​திரம் அடைந்த பிறகு முதல் குடியரசுத் தலை​வர் ராஜேந்​திர பிர​சாத், முதல் துணை பிரதமர் சர்​தார் வல்​லப​பாய் படேலின் முயற்​சி​யால் சோம​நாதர் கோயில் பிரம்​மாண்​ட​மாக கட்​டப்​பட்​டது.

கஜினி முகமது​வின் தாக்​குதலுக்கு பிறகு ஆயிரம் ஆண்​டு​களைக் கடந்து சோம​நாதர் கோயில் கம்​பீர​மாக நிற்​கிறது. இதை நினை​வு​கூரும் வகை​யில் கடந்த 8-ம் தேதி சோம​நாதர் சுயமரி​யாதை பெரு​விழா தொடங்​கியது. இந்த விழா நாளை​யுடன் நிறைவடைகிறது.

இந்த சூழலில் பிரதமர் நரேந்​திர மோடி நேற்று மாலை சோம​நாதர் கோயிலுக்கு சென்​றார். இரவு 8 மணி​யள​வில் ஓம்​கார மந்​திரம் பாராயணம் நிகழ்ச்​சி​யில் பங்​கேற்று சுவாமியை வழிபட்​டார். அதன் பின்​னர் ட்ரோன் நிகழ்ச்​சி​யைப் பார்​வை​யிட்​டார்.

இன்று காலை சுமார் 9.45 மணி​யள​வில் சோம​நாதர் கோயிலை பாது​காக்க உயிர்த் தியாகம் செய்த எண்​ணற்ற வீரர்​களை கவுரவிக்​கும் வகை​யில் நடை​பெறும் பாரம்​பரிய வீர யாத்​திரை​யில் பிரதமர் மோடி பங்​கேற்​கிறார். அதன் பிறகு காலை 10.15 மணி​யள​வில் சோம​நாதர் கோயி​லில் அவர் வழி​பாடு நடத்​துகிறார். காலை 11 மணி​யள​வில் சோம​நாதர் சுயமரி​யாதை பெரு​விழா தொடர்​பான நிகழ்ச்​சி​யில் அவர் பங்​கேற்று பேசுகிறார்.

இன்று பிற்​பகலில் கட்ச் மற்​றும் சவு​ராஷ்டிரா பகு​திக்​கான துடிப்பு மிக்க குஜ​ராத் மண்டல மாநாடு ராஜ்கோட்​டில் நடை​பெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்​கேற்​பார். அங்கு வர்த்தக கண்​காட்சியை அவர் தொடங்கி வைப்​பார். பின்​னர் ராஜ்கோட்​டில் உள்ள மார்​வாடி பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் விழா​வில் அவர் சிறப்பு உரை​யாற்​று​வார். பின்​னர் ராஜ்கோட்​டிலிருந்து அகம​தா​பாத் செல்​லும் பிரதமர் மோடி மாலை 5.15 மணி​யள​வில் மெட்ரோ ரயில் திட்​டப் பணி​களை தொடங்கி வைப்​பார்.

அகம​தா​பாத்​தில் நாளை ஜெர்​மனி பிரதமர் பிரெட்​ரிக் மெர்ஸை பிரதமர் மோடி சந்​திக்​கிறார். இரு தலை​வர்​களும் காலை​யில் சபர்​மதி ஆசிரமத்​துக்கு செல்​கின்​றனர். அதன்​பிறகு சபர்​மதி ஆற்​றங்​கரை​யில் நடை​பெறும் சர்​வ​தேச பட்​டம் விடும் விழா​வில் இரு​வரும் பங்​கேற்க உள்​ளனர். பின்​னர் காந்​திநகரில் உள்ள மகாத்மா மந்​திரில் இரு தலை​வர்​களும் அதி​காரப்​பூர்​வ​மாக பேச்​சு​வார்த்தை நடத்த உள்​ளனர். அப்​போது பல்​வேறு ஒப்​பந்​தங்​கள்​ கையெழுத்​தாகும்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

குஜராத்தின் சோமநாதர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் 3,000 இளைஞர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in