பிப்​ரஹ்வா நினை​வுச் சின்​னம்: ஜன.3-ல் கண்​காட்சி தொடக்கம்

பிப்​ரஹ்வா நினை​வுச் சின்​னம்: ஜன.3-ல் கண்​காட்சி தொடக்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய கலாச்​சார அமைச்​சகம் “தாமரை ஒளி: ஞானம் பெற்​றவரின் நினை​வுச் சின்​னங்​கள்” என்ற தலைப்​பில் கலாச்​சார கண்​காட்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளது.

இதில், போற்றப்​படும் புனித பிப்ரஹ்வா நினை​வுச் சின்​னங்களும், அதனுடன் தொடர்​புடைய முக்​கிய தொல்​பொருட்​களும் காட்​சிப்​படுத்​தப்பட உள்​ளன. இந்த கண்​காட்சி புத்​தரின் போதனை​களு​டன் இந்​தி​யா​வில் நீடித்த நாகரி​கத் தொடர்​பை​யும், அதன் செழு​மை​யான ஆன்​மீக பாரம்​பரி​யத்​தை​யும் பாது​காத்து வெளிப்​படுத்​து​வ​தில் உள்ள இந்​தி​யா​வின் அர்​ப்பணிப்பை அடிக்​கோடிட்டு காட்​டும்.

இந்த கண்​காட்​சியை பிரதமர் மோடி ஜனவரி 3-ம்​ தே​தி​ டெல்​லியில் உள்ள ராய் பித்​தோரா கலாச்​சார வளாகத்​தில் தொடங்கி வைக்​கிறார். இந்​தக் கண்​காட்​சி​யில் காட்​சிப்​படுத்​தப்​படும் நினை​வுச்​சின்​னங்​களில், மகத்​தான வரலாற்​று, தொல்​லியல் மற்​றும் ஆன்​மீக முக்​கி​யத்​து​வம் வாய்ந்த, திரும்ப தாயகம் கொண்​டு​வரப்​பட்ட புனித நினை​வுச்​சின்​னங்​களும் அடங்​கும்.

பிப்​ரஹ்வா நினை​வுச் சின்​னம்: ஜன.3-ல் கண்​காட்சி தொடக்கம்
தீவிர​வா​தி​களை மடக்​கிய அதி​காரி: மகா​ராஷ்டிரா டிஜிபியானார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in