இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.300-க்கு மட்டுமே பெட்ரோல்: சத்தீஸ்கரில் கட்டுப்பாடு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் பல மாவட்​டங்​களில் எரிபொருள் தட்​டுப்​பாடு தொடர்​பான வதந்தி காரண​மாக மக்​கள் பதற்​றத்​தில் அதி​கள​வில் பெட்​ரோல் மற்​றும் டீசலை வாங்கி குவிப்​பதை காண முடிந்​த​தாக மாநில அரசு தெரி​வித்​துள்​ளது.

இந்நிலையில், சத்​தீஸ்​கரின் கரி​யாபந்த் மாவட்ட ஆட்​சி​யர் பகவான் சிங் உய்கே நேற்று முன்​தினம் மாவட்​டத்​தில் உள்ள அனைத்து பெட்​ரோல் நிலை​யங்​களுக்​கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்​பி​யுள்​ளார்.

அதில், ‘‘எரிபொருள் இருப்பு நிலைமை கட்​டுக்​குள் கொண்டு வரப்​படும் வரை, இரு சக்கர வாக​னங்​களுக்கு ரூ.300-க்கு அதி​க​மாக​வும் 4 சக்கர வாக​னங்​களுக்கு ரூ.1,000-க்கு அதி​க​மாக​வும் பெட்​ரோல் வழங்​கக் கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேரல்​கள், பாட்​டில்​களில் பெட்​ரோல் மற்​றும் டீசல் விற்​கக் கூடாது. அதேநேரம் ஆம்​புலன்​ஸ்​கள் போன்ற அத்​தி​யா​வசிய சேவை​களில் ஈடு​பட்​டுள்ள வாக​னங்​களுக்கு பெட்​ரோல் மற்​றும் டீசல் விநி​யோகத்​தில் முன்​னுரிமை அளிக்​கப்பட வேண்​டும்’’ என்று கூறி​யுள்​ளார்.

எனினும், 4 சக்கர வாக​னங்​களுக்​கான இந்த கட்​டுப்​பாடு திரும்​பப் பெறப்​படும் என்று மாவட்ட ஆட்​சி​யர் பிறகு தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
3-வது குழந்தைக்கு ரூ.30,000; 4-வது குழந்தை பெற்றால் ரூ.40,000: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in