

புதுடெல்லி: சென்னை உயர் நீதிமன்ற கொலீஜியத்தில் நீதிபதி நிஷா பானுவை சேர்க்காததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிஷா பானு, கேரள உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனாலும், அவர் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே நீடித்தார். குடியரசுத் தலைவர் உத்தரவுக்குப் பின்னரே மாற்றலாகிச்சென்றார்.
இடைப்பட்டக்காலத்தில் நடந்த கொலீஜியத்தில் அவர் சேர்க்கப்படாததை எதிர்த்து பிரேம்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.இதை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, கொலீஜிய நடைமுறை நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதல்ல எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.