ராணுவ முகாமை தகர்க்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: 11 ஆதரவாளர்கள் கைது

ராணுவ முகாமை தகர்க்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: 11 ஆதரவாளர்கள் கைது
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி மற்​றும் தேசிய தலைநகர் மண்​டலத்​தில் தீவிர​வாத தாக்​குதல் நடத்த பாகிஸ்​தான் உளவு அமைப்​பான ஐஎஸ்ஐ உத்​தர​வின்​படி செயல்​படும் ஷேசாத் பாட்டி தலை​மையி​லான கும்​பல் சதி செய்​வ​தாக உ.பி. சிறப்பு பிரிவு போலீ​ஸாருக்கு உளவுத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து போலீ​ஸார் கடந்த மார்ச் 31-ம் தேதி வழக்​குப் பதிவு செய்து புலன் விசா​ரணை​யைத் தொடங்​கினர்.

டெல்​லி​யில் உள்ள வரலாற்​றுச் சிறப்பு மிக்க கோயில், அங்கு பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டுள்ள போலீ​ஸார், டெல்லி - சோனிபட் நெடுஞ்​சாலை​யில் உள்ள பிரபல உணவு விடு​தி, அங்கு வரும் மக்​கள் கூட்​டம், ஹரி​யா​னா​வில் உள்ள ராணுவ முகாம், உ.பி. காவல் நிலை​யங்​கள் ஆகிய​வற்​றின் மீது தாக்​குதல் நடத்த பாகிஸ்​தான் ஐஎஸ்ஐ சதி திட்​டம் தீட்​டி​யுள்​ளது தெரிந்தது.

இதையடுத்து மத்​திய பிரதேசம் குவாலியர் மாவட்​டத்​தைச் சேர்ந்த ராஜ்வீர் மற்​றும் விவேக் பஞ்​சரா ஆகியோர் கடந்த ஏப்​ரல் மாதம் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்நிலை​யில் நேற்று முன்​தினம் 9 பேர் பல மாநிலங்​களில் கைது செய்​யப்​பட்​டனர். இதன் மூலம்​ பாகிஸ்​தான்​ ஐஎஸ்​ஐ சதி முறியடிக்​கப்​பட்​டுள்​ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணுவ முகாமை தகர்க்கும் பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி முறியடிப்பு: 11 ஆதரவாளர்கள் கைது
நாட்டில் முதல் முறையாக பெங்களூரு மத்திய சிறையில் குழந்தைகள் பராமரிப்பு மையம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in