50,000 ஒடிசா​ கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு

50,000 ஒடிசா​ கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு
Updated on
1 min read

புவனேஸ்வர்: ஒடிசா மாநில மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை (ஐ.டி.) அமைச்​சர் முகேஷ் மகாலிங் கூறியதாவது: திருத்​தப்​பட்ட பாரத்​நெட் திட்​டத்​தின் கீழ், அடுத்த 3 ஆண்​டு​களில் 6,799 கிராம ஊராட்​சிகளின் கீழ் வரும் சுமார் 50,000 கிராமங்​களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு வழங்​கப்​படும்.

இத்​திட்​டத்​தைச் செயல்​படுத்​து​வதற்​கான முத்​தரப்பு ஒப்​பந்​தம், மாநில மின்​னணு​வியல் மற்​றும் தகவல் தொழில்​நுட்​பத்​துறை, டிஜிட்​டல் பாரத் நிதி மற்​றும் பாரத் சஞ்​சார் நிகாம் ஆகியவற்றுக்கு இடையே புதன்​கிழமை கையெழுத்​தானது.

ரூ.3,384 கோடி​ மதிப்பிலான இத்​திட்​டத்​தின் கீழ், ஒரு உயர் செயல்​திறன் கொண்ட நெட்​வொர்க்​கிங் தொழில்​நுட்​பம் அமைக்​கப்​படும். இதன்​மூலம் கிராம ஊராட்​சிகள், அரசு நிறு​வனங்​கள், கிராமப்​புற சமூகங்​கள் மற்​றும் வீடு​களுக்கு அதிவேக பிராட்​பேண்ட் மற்​றும் வீடு​களுக்கு ஆப்​டிகல் பைபர் இணைப்​பு​களை வழங்​கப்​படும்.

இந்த டிஜிட்​டல் உள்​கட்​டமைப்​பு, மின்​னணு ஆளு​மை, டிஜிட்​டல் கல்​வி, தொலைமருத்​து​வம், நிதி உள்​ளடக்​கம் மற்​றும் கிராமப்​புற தொழில்​முனைவு ஆகிய​வற்றை வலுப்​படுத்​து​வதுடன், சுமார் 10,000 நேரடி மற்​றும்​ மறை​முக வேலை​வாய்​ப்​பு​களை உருவாக்கும்​. இவ்​​வாறு அவர்​ தெரி​வித்​​தார்​.

50,000 ஒடிசா​ கிராமங்களுக்கு ஆப்டிகல் ஃபைபர் இணைப்பு
அறநிலையத் துறை டெண்டர்கள் அனைத்தும் இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in