சிஆர்பிஎஃப் படையில் உள்ள பாகுபாட்டை நீக்குவோம்: ராகுல் காந்தி அறிவிப்பு

சிஆர்பிஎஃப் படையில் உள்ள பாகுபாட்டை நீக்குவோம்: ராகுல் காந்தி அறிவிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: மத்​திய ஆயுதப்​படை(சிஆர்​பிஎஃப்) படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று எக்ஸ் தளத்தில் கூறிய​தாவது:

“சிஆர்​பிஎஃப் படை​யினரின் வீரதீர தினத்தை முன்​னிட்​டு, நமது படையைச் சேர்ந்த துணிச்​சலான மற்​றும் வீரமிக்க வீரர்​களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகளை​யும், மரி​யாதைக்​குரிய அஞ்​சலியை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன். சிஆர்​பிஎஃப் படையினரின் வீர​மும் தியாக​மும் ஒவ்​வொரு நாளும் நமது தேசத்தைப் பாது​காக்​கின்​றன.

அதே​ நேரம், சிஆர்​பிஎப் மற்​றும் சிஏபிஎஃப் பணி​யாளர்​களுக்கு உரிய நேரத்​தில் பதவி உயர்​வு​களோ அல்​லது தங்​கள் சொந்தப் படையையே வழி நடத்​தும் உரிமையோ கிடைப்​ப​தில்​லை. இதற்கு ஒரே காரணம், அப்​படை​யின் உயர்​மட்​டத் தலை​மைப் பதவி​கள் அப்​படைக்கு வெளியி​லிருந்து வருபவர்​களுக்​காகவே ஒதுக்கப்பட்டுள்ளன என்​பதே ஆகும். காங்​கிரஸ் ஆட்​சிக்கு வரும் போது இந்த பாகு​பாட்டை நீக்​கு​வோம். இவ்​வாறு அவர் தெரிவித்துள்​ளார்​.

சிஆர்பிஎஃப் படையில் உள்ள பாகுபாட்டை நீக்குவோம்: ராகுல் காந்தி அறிவிப்பு
மன்னார்குடி தொகுதி மக்களின் மனம் கவரப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in