அணுசக்தி மேம்பாட்டு மசோதா நிறைவேற்றம்

அணுசக்தி மேம்பாட்டு மசோதா நிறைவேற்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: அணுசக்தி மேம்​பாட்டு மசோதா மக்​களவையை அடுத்​து, மாநிலங்​களவை​யிலும் நேற்று நிறைவேறியது.

நாட்​டில் அணு மின் உற்​பத்​தியை அதி​கரிக்​கும் நோக்​கில், அணுசக்​தித் துறையை தனி​யாருக்கு திறந்​து​விட மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இதற்​காக ‘இந்​தி​யா​வின் மாற்​றத்​துக்​கான அணுசக்தி மேம்​பாட்டு (சாந்​தி) மசோதா மக்​களவை​யில் நேற்று முன்​தினம் தாக்​கல் செய்​யப்​பட்டு நிறைவேற்​றப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த மசோ​தாவை மத்​திய அணுசக்​தித் துறை இணை​யமைச்​சர் ஜிதேந்திர சிங் நேற்று மாநிலங்​களவையில் தாக்​கல் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

அணுசக்​தியை மேம்​படுத்த மத்​திய அரசு பல நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. 2015-ல் இத்​துறை தனி​யார்​-அரசு கூட்டு முயற்​சிக்கு திறந்​து​ விடப்பட்​டது. ஆனால், பொதுத்துறை நிறு​வனங்​கள் மட்​டுமே அனு​ம​திக்​கப்​பட்டன. இப்​போது தனி​யார் நிறுவனங்​களுக்​கும் திறந்​து​விடப்பட உள்​ளது. அதே​நேரம் பாது​காப்பு விஷ​யத்​தில் எந்த சமரச​மும் செய்​து​கொள்​ளப்பட மாட்​டாது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

விவாதத்​துக்​குப் பிறகு மசோதா நிறைவேறியது. இதையடுத்​து, இந்த மசோதா குடியரசுத் தலை​வர் ஒப்​புதலுக்​கு அனுப்​பி வைக்​கப்​படும்.

அணுசக்தி மேம்பாட்டு மசோதா நிறைவேற்றம்
மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம்: டெல்லியில் பெட்ரோல் நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் குறைந்தன

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in