தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி: தேசிய தேர்வு முகமை தொடங்கியது

தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி: தேசிய தேர்வு முகமை தொடங்கியது
Updated on
1 min read

புதுடெல்லி: நீட் உள்​ளிட்ட தேர்​வு​களின் கண்​காணிப்பு மற்​றும் மேற்​பார்​வையை வலுப்​படுத்​து​வதற்​காக, தேர்வு அதி​காரி​களுக்​கான பிரத்​யேக டிஜிட்​டல் பயிற்​சித் திட்​டத்தை தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) தொடங்​கி​யுள்​ளது.

‘ஐகாட் கர்​மயோகி பாரத்' தளத்​தில் இந்​தப் பயிற்சி அளிக்​கப்​படு​கிறது. இதுகுறித்து என்​டிஏ நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் மேலும் கூறி​யிருப்​ப​தாவது:

‘பரிக்‌ஷா கர்​மயோகி: தேர்வு அதி​காரி​களுக்​கான திறன் மேம்​பாட்​டுத் திட்​டம்' என்று பெயரிடப்​பட்​டுள்ள இத்​திட்​டம், தேர்​வுப் பணி​யாளர்​களின் திறனை வலுப்​படுத்​த​வும், ஆஃப்​லைன் தேர்​வு​களை சீராக, பாது​காப்​பாக மற்​றும் தரமாக நடத்​து​வதை உறுதி செய்​ய​வும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​வுப் பணி​யாளர்​கள், குறிப்​பாக மையக் கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் அறை கண்​காணிப்​பாளர்​களுக்​காக இந்​தப் பாடநெறி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தப் பயிற்சி 4 பகு​தி​களை கொண்​டது. தேர்​வு​களில் நேர்​மை, வெளிப்​படைத்​தன்மை மற்​றும் நம்​பகத்​தன்​மை​யைப் பராமரிப்​ப​தில் தேர்​வுப் பணி​யாளர்​களின் பங்கு குறித்து முதல் பகு​தி​யில் விளக்​கப்​படு​கிறது. தேர்வு மையத் தயார்​நிலை, பாது​காப்பு ஏற்​பாடு​கள் மற்​றும் நிலை​யான செயல்​பாட்டு நடை​முறை​களைப் பின்​பற்​று​தல் உள்​ளிட்ட தேர்வு நடப்​ப​தற்கு முந்​தைய ஆயத்​தப் பணி​களை 2-ம் பகுதி உள்​ளடக்​கி​யுள்​ளது.3-ம் பகு​தி​யானது தேர்வு நடக்​கும் நாளன்று மேற்​கொள்ள வேண்​டிய பணி​களை நான்கு கட்​டங்​களாக (தேர்​வுக்கு முன், தேர்வு தொடங்​கும்​போது, தேர்​வின்​போது மற்​றும் தேர்​வுக்​குப் பிறகு) கையாள்​கிறது.

4-ம் பகு​தி​யானது. முக்​கிய அறி​வுறுத்​தல்​கள் மற்​றும் பொறுப்​பு​களின் சுருக்​க​மான மறு​பார்​வையை வழங்​கு​கிறது. இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ளது.

இளநிலை மருத்​து​வப் படிப்​பு​களுக்​கான நீட் நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 3-ம் தேதி நடை​பெற்​றது. இத்​தேர்வு வினாத்தாள் கசிந்​த​தாக எழுந்த புகார்​களை தொடர்ந்து அத்​தேர்வு ரத்து செய்​யப்​பட்டு மறு​தேர்வு ஜூன் 21-ல் நடை​பெற உள்​ளது. வி​னாத்​தாள் கசிவு தொடர்​பாக சிபிஐ வி​சா​ரித்​து வருகிறது.

தேர்வு அதிகாரிகளுக்கு டிஜிட்டல் பயிற்சி: தேசிய தேர்வு முகமை தொடங்கியது
ஆந்த்ரோபிக் ஏ.ஐ. மாடல்களை வெளிநாட்டினர் பயன்படுத்த தடை: ஸ்ரீதர் வேம்பு எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in