மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் நிர்​மலா சீதா​ராமன் வலியுறுத்தல்

மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் நிர்​மலா சீதா​ராமன் வலியுறுத்தல்
Updated on
1 min read

புதுடெல்லி: நிதி நிர்​வாகத்​தில் மாநிலங்​கள் வெளிப்​படைத்​தன்​மை​யுடன் நடந்​து​கொள்ள வேண்​டும் என்று மத்​திய நிதி அமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் வலி​யுறுத்தி உள்​ளார்.

டைம்ஸ் நெட்​வொர்க் இந்​தியா பொருளா​தார மாநாட்​டில் கலந்து கொண்ட அவர் இதுகுறித்து கூறிய​தாவது: நிதி நிர்​வாகத்​தில் வெளிப்​படைத் தன்​மைக்​காக மத்​திய அரசு தெளி​வான இலக்​கு​களை நிர்​ண​யித்து அதனை சரி​யாக கடைபிடித்​துள்​ளது. இதனால் கடன் அளவு குறைந்​துள்​ளது. இதேபோல் மாநிலங்​களும் தங்​களது நிதி மேலாண்​மை​யில் வெளிப்​படைத் தன்​மை​யுடன் செயல்பட வேண்​டும்.

அடுத்த நிதி​யாண்​டில் கடன் அளவைக் குறைப்​ப​தி​லும் அதிக கவனம் செலுத்​தப்​படும். வரும் 2047-ம் ஆண்​டுக்​குள் வளர்ந்த நாடாக மாறும் நமது இலக்கை அடைவதற்கு மாநிலங்​கள் தங்​களது கடன் அளவு​களை குறைக்க வேண்​டும்.

பட்​ஜெட் தயாரிப்​பில் வெளிப்​படைத்​தன்​மைக்கு தெளி​வான இலக்​கு​களை மத்​திய அரசு வரையறுத்​துள்​ளது. இதன் மூலம் நிதி மேலாண்மை அனை​வருக்​கும் தெரி​யும் வகை​யிலும், மிக உயர்ந்த பொறுப்​புடமை​யும் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்​.

மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் நிர்​மலா சீதா​ராமன் வலியுறுத்தல்
“பிராந்திய அமைதி, பாதுகாப்பில் இரு நாடுகளும் இயல்பான கூட்டாளிகள்” - எத்தியோப்பியா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in