

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவை தொகுதியின் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இவர் சிறைக்குள் செல்போனில் பேசுவது போன்ற வீடியோ வெளியானது. இதையடுத்து, சிறைத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 21 செல்போன்கள், 17 சிம் கார்டுகள் உள்ளிட்டவை சிக்கின. இதுதொடர்பாக சிறைத் துறை ஊழியர்கள் 3 பேர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.