“நேருவும், இந்திராவும்தான் வாக்குகளை திருடினார்கள்” - மக்களவையில் அமித் ஷா குற்றம் சாட்டியதால் கடும் வாக்குவாதம்

“நேருவும், இந்திராவும்தான் வாக்குகளை திருடினார்கள்” - மக்களவையில் அமித் ஷா குற்றம் சாட்டியதால் கடும் வாக்குவாதம்
Updated on
1 min read

புதுடெல்லி: நேரு​வும் இந்​தி​ரா​வும்தான் வாக்​கு​களை திருடி​னார்கள் என மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா குற்​றம்​சாட்டி உள்​ளார்.

நாடாளு​மன்ற மக்களவையில் தேர்​தல் சீர்​திருத்​தம், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி (எஸ்​ஐஆர்) தொடர்​பான விவாதம் 2-வது நாளாக நேற்​றும் நடை​பெற்​றது. இதில் மத்​திய உள்துறை அமைச்​சர் அமித் ஷா பேசி​ய​தாவது:

தேர்​தல் ஆணை​யம் எஸ்​ஐஆர் பணி​களை மேற்​கொண்டு வரு​கிறது. இதற்கு தேர்​தல் ஆணை​யம்​தான் பொறுப்​பு, மத்​திய அரசு அல்ல. எனவே, இதுகுறித்து நாடாளு​மன்​றத்​தில் விவாதம் நடத்​தத் தேவை​யில்​லை. அதே​நேரம், தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பாக விரி​வான விவாதம் நடத்த வேண்​டும் என்ற எதிர்க்​கட்​சி​யினரின் கோரிக்​கையை ஏற்று விவாதம் நடத்த அரசு சம்​ம​தித்​தது.

எஸ்​ஐஆர் பணி நடை​பெறு​வது முதல் முறை அல்ல. முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங் ஆட்​சி​யின்​போதும் இப்​பணி நடை​பெற்​றது. தேர்​தலை நேர்​மை​யாக நடத்​து​வதற்​காகத்​தான் இந்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. சில வாக்​காளரின் பெயர் இரண்டு இடங்​களில் இடம்​பெற்​றுள்​ளன. மேலும் உயி​ரிழந்த லட்​சக்​கணக்​கானவர்​களின் பெயர்​களும் பட்​டியலில் இடம்​பெற்​றுள்​ளன.

இதனால் முறை​கேடு நடக்க வாய்ப்பு உள்​ளது. இதைத் தடுக்​கவே இந்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது. ஆனால் காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் எஸ்​ஐஆர் பணி​கள் குறித்து பொய்​யான தகவலை பரப்பி வரு​கின்​றன. இந்த விவ​காரத்​தில் எதிர்க்​கட்​சிகள் வேண்​டுமென்றே தவறாக வழிநடத்​துகின்​றன.

தேர்​தலில் நீங்​கள் (காங்​கிரஸ்) வெற்றி பெற்​றால் வாக்​காளர் பட்​டியல் தூய்​மை​யாக உள்​ளது. ஆனால் தோல்வி அடைந்​தால் வாக்​காளர் பட்​டியலை குறை கூறு​வீர்​கள். இந்த இரட்டை வேடம் வேண்​டாம். தேர்​தல் தோல்விக்கு உங்​கள் தலை​மைத்​து​வம்​தான் காரணம். மின்​னணு வாக்கு இயந்​திரமோ வாக்​காளர் பட்​டியலோ காரணம் அல்ல. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

அமித் ஷா பேசிக்​கொண்​டிருந்​த​போது ராகுல் காந்தி உள்​ளிட்ட காங்​கிரஸ் உறுப்​பினர்​கள் குறுக்​கிட்டு பேசினர். இதனால் ஆளும் கட்சி மற்​றும் எதிர்க்​கட்சி உறுப்​பினர்​கள் இடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

குறிப்​பாக அமித் ஷா பேசும்​போது, ‘‘தேர்​தலில் வாக்கு திருட்டு நடை​பெறு​வ​தாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் (ராகுல் காந்​தி) கூறுகிறார். ஆனால் நாடு சுதந்​திரம் அடைந்​த​போது முதல் பிரதமரை தேர்ந்​தெடுக்​கும்​போது​தான் முதல் முறை​யாக வாக்கு திருட்டு நடை​பெற்​றது. மாநில காங்​கிரஸ் தலை​வர்​களுக்கு தலா ஒரு வாக்​குரிமை வழங்​கப்​பட்​டது.

அப்​போது, சர்​தார் வல்​லப​பாய் படேலுக்கு 28 வாக்​கு​களும் ஜவஹர்​லால் நேரு​வுக்கு 2 வாக்​கு​களும் கிடைத்​தன. ஆனால், நேரு பிரதம​ரா​னார். அடுத்ததாக, இந்திரா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், வெற்றி செல்லாது என தீர்ப்பு வழங்கியது. இதுதான் மிகப்பெரிய வாக்கு திருட்டு” என்றார்.

அமித் ஷாவின் இந்​தப் பேச்​சைக்​ கண்​டித்​து எதிர்க்​கட்​சிகள்​ அமளி​யில்​ ஈடுபட்​டன.

“நேருவும், இந்திராவும்தான் வாக்குகளை திருடினார்கள்” - மக்களவையில் அமித் ஷா குற்றம் சாட்டியதால் கடும் வாக்குவாதம்
இளைஞர்களுக்கு அச்சுறுத்தல்: உ.பி. முதல்வர் யோகி எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in