‘மனிதாபிமானம் மிக்கதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுங்கள்’ - நிதியமைச்சருக்கு நவீன் பட்நாயக் கடிதம்

‘மனிதாபிமானம் மிக்கதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுங்கள்’ - நிதியமைச்சருக்கு நவீன் பட்நாயக் கடிதம்
Updated on
2 min read

புதுடெல்லி: சகோதரியின் எலும்புக் கூடுடன் வந்ததை அடுத்து வங்கி நிர்வாகம் பணம் வழங்கிய நிலையில், மனிதாபிமானத்துடன் கூடியதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒடிசா எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “ஜீத்து முண்டா என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர் தனக்கு சேர வேண்டிய பணத்தைப் பெறுவதற்காக தனது சகோதரியின் மரணத்துக்கான ஆதாரமாக அவரது எலும்புக்கூட்டைத் தோண்டி எடுத்து வங்கிக்கு எடுத்துச் செல்லும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வங்கிக்கு அவர் பலமுறை சென்றும், அதிகாரிகளிடம் இருந்து எந்த உதவியோ அல்லது தெளிவோ கிடைக்காத நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதாகக் கூறி இந்த மனிதாபிமானமற்ற நடத்தையை வங்கி நிாயயப்படுத்த முயன்றதுதான். வங்கி அதிகாரிகள் நடைமுறைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தாங்கள் சேவை செய்ய வேண்டிய மக்களையே கைவிடும் போக்கையே இது காட்டுகிறது.

ஜனநாயகத்தில் விதிகள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவே தவிர, அவர்களை அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை நான் மீண்டும் வலியுறுத்தத் தேவையில்லை. இந்த கொடுமையான சம்பவம் ஒடிசா முழுவதும் மக்களின் உணர்களை கொந்தளிப்படையச் செய்துள்ளது. அதோடு, இந்த சம்பவம் நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவம் தனிப்பட்டதாக இருந்தாலும், வங்கி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு புரிதலை இது நமக்கு அளிக்கிறது. முதலில், இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்கு தெளிவான பொறுப்புக்கூறல் நிர்ணயிக்கப்படுவதை உடனடியாக உறுதி செய்யுமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இது, மனிதாபிமானம், பரிவு, இரக்கத்துடன் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவையை வழங்குவதை உறுதி செய்ய ஒரு தெளிவான சமிங்ஞையை அனுப்பும். உங்களின் இரக்கமுள்ள தலையீட்டால், குடிமக்களிடம் இதுபோன்ற மனிதாபிமானமற்ற நடத்தை நாட்டின் வேறு எந்த பகுதியிலும் மீண்டும் நிகழாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: ஒடிசா மாநிலம் கேந்​துஜார் மாவட்​டம் தியானாலி கிராமத்​தைச் சேர்ந்​தவர் ஜீத்து முண்​டா. இவரது சகோ​தரி கக்ரா முண்டா இரண்டு மாதங்​களுக்கு முன்பு கால​மா​னார். மல்​லி​பாசி பகு​தி​யில் உள்ள ஒடிசா கிராமின் வங்​கிக் கிளை​யில் கக்ரா கணக்கு வைத்திருந்தார். அதில் இருந்த ரூ.19,400-ஐ எடுப்​ப​தற்​காக ஜீத்து முண்டா வங்​கிக்​குச் சென்​றுள்​ளார்.

கல்​வியறிவு இல்​லாத பழங்​குடி​யின​ரான ஜீத்து முண்டாவிடம், அவரது சகோ​தரி​யின் இறப்​புச் சான்​றிதழ் அல்​லது வாரிசுச் சான்றிதழ் இல்​லை. இதனால், கணக்கு வைத்​திருப்​பவர் நேரில் வர வேண்​டும் அல்​லது உரிய ஆவணங்​களைச் சமர்ப்​பிக்க வேண்டும் என்று வங்கி மேலா​ளர் கூறி​யுள்​ளார்.

சட்ட நடை​முறை​களைப் புரிந்து கொள்ள முடி​யாத நிலையில் விரக்​தி​யடைந்த ஜீத்து முண்​டா, கடந்த திங்கள்கிழமை மயானத்திற்​குச் சென்று தனது சகோ​தரியின் உடலைத் தோண்டி எடுத்​து, எலும்​புக்​கூடை துணியால் சுற்றி தோளில் சுமந்​த​படி 3 கிலோ மீட்​டர் தூரம் நடந்து வங்​கிக்கு வந்​தார்.

இந்​தக் காட்​சிகள் சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி நாடு முழுவதும் அதிர்​வலைகளை ஏற்​படுத்​தின. இது வங்கி​யின் மனிதாபி​மானமற்ற செயல் எனப் பலரும் கண்​டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஒடிசா முதல்​வர் மோகன் சரண் மாஜி​யும் விசா​ரணைக்கு உத்​தர​விட்​டார்.

இந்நிலை​யில் ஒடிசா கிராமின் வங்கி தனது எக்ஸ் தளத்தில், ‘‘இறந்​தவர் நேரில் வர வேண்​டும் என்று வங்கி அதி​காரி​கள் தெரிவித்​தாகக் கூறப்​படும் தகவல் தவறானது. சட்​டப்​படி​யான ஆவணங்​கள் இல்​லாத​தால் பணத்தை வழங்க முடிய​வில்​லை. அந்த நபர் மது​போதை​யில் இருந்​த​தால் நடை​முறை​களை விளக்கிக் கூறி​யும் அவர் ஏற்​க​வில்​லை. தற்​போது அரசு அதிகாரிகள் வழங்​கிய வாரிசுச் சான்​றிதழின் அடிப்​படை​யில், ரூ.19,402 தொகை 3 வாரிசு​தா​ரர்​களிடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது’’ என தெரிவிக்​கப்​பட்​டது.

‘மனிதாபிமானம் மிக்கதாக வங்கி நிர்வாகத்தை மாற்றுங்கள்’ - நிதியமைச்சருக்கு நவீன் பட்நாயக் கடிதம்
வாக்கு எண்ணிக்கை தொடர்பான திரிணமூல் காங். வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in