அசாமில் ஜவுளி துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு

அசாமில் ஜவுளி துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு
Updated on
1 min read

திஸ்பூர்: அ​சாமின் குவாஹாட்டி நகரில் ஜவுளி துறை அமைச்​சர்​களின் தேசிய மாநாடு வரும் வியாழக்​கிழமை தொடங்க உள்​ளது.

இது குறித்து அதி​காரி​கள் நேற்று கூறிய​தாவது: “இந்​தி​யா​வின் ஜவுளித் துறை: வளர்ச்​சி, பாரம்​பரி​யம் மற்​றும் புத்​தாக்​கத்தை நெய்​தல்” என்ற கருப்​பொருளு​டன் ஜவுளித் துறை அமைச்​சர்​களின் தேசிய மாநாடு வரும் வியாழக்​கிழமை தொடங்​கு​கிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டை மத்​திய ஜவுளி அமைச்​சகம், அசாம் மாநில அரசுடன் இணைந்து ஏற்​பாடு செய்​துள்​ளது.

இந்​தி​யாவை ஒரு உலகளா​விய ஜவுளி உற்​பத்தி மைய​மாக நிலைநிறுத்​து​வதற்​கான ஒரு ஒருங்​கிணைந்த தேசிய உத்தி குறித்து விவா​திப்​ப​தற்​காக மத்​திய, மாநில ஜவுளித் துறை அமைச்​சர்​கள் மற்​றும் மத்​திய, மாநில அரசுகளின் மூத்த அதி​காரி​களை ஒன்​றிணைப்​பதை இந்த மாநாடு முக்​கிய நோக்​க​மாகக் கொண்​டுள்​ளது.

350 பில்​லியன் டாலர் மதிப்​பிலான ஜவுளித் துறையை உரு​வாக்​கு​வது, 2030-க்​குள் 100 பில்​லியன் டாலர் ஜவுளி ஏற்​றுமதி இலக்கை எட்​டு​வது போன்ற தேசிய தொலைநோக்​குப் பார்​வைக்கு ஏற்ப விவாதங்​கள் நடை​பெற உள்​ளன.

தொடக்க அமர்​வில் மத்​திய ஜவுளித் துறை அமைச்​சர் கிரி​ராஜ் சிங், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்​றும் மத்​திய ஜவுளித் துறை இணை​யமைச்​சர் பவித்ரா மார்​கெரிட்டா உள்​ளிட்​டோர் கலந்​து​கொள்​வார்​கள். இவ்​வாறு அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.

அசாமில் ஜவுளி துறை அமைச்சர்களின் தேசிய மாநாடு
லாலு பிரசாத் மனு மீது இன்று விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in