கர்நாடக மாநிலத்தில் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து பைக்கில் சென்றவர் உயிரிழப்பு

உயிரிழந்த சஞ்​சுகு​மார் ஹொசமணி

உயிரிழந்த சஞ்​சுகு​மார் ஹொசமணி

Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பீதர் மாவட்​டத்​தில் உள்ள தாலமடகியை சேர்ந்​தவர் சஞ்​சுகு​மார் ஹொசமணி (48). இவர் நேற்று சங்​க​ராந்​திக்கு தனது மகளை சந்​திப்​ப​தற்​காக‌ தாலமடகி பாலம் அருகே பைக்கில் சென்​று​ கொண்​டிருந்​தார். அப்​போது பட்​டத்​தின் மாஞ்சா நூல் சஞ்​சுகு​மாரின் கழுத்​தில் சிக்கிக் கொண்டதில் அவர் கீழே விழுந்​தார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளி​யேறியது.

உடனே அவர் தனது மகளை செல்​போனில் தொடர்​பு​கொண்டு தகவல் தெரி​வித்​தார். மேலும் அவராகவே ஆம்​புலன்ஸை தொடர்​பு​கொள்ள முயற்​சிக்​கும்​போது மயங்கி விழுந்​தார். இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி​யுள்​ளது.

அப்​போது வாகன ஓட்டி ஒரு​வர் அவரது கழுத்​தில் துணியை வைத்​து, ரத்​தம் வெளி​யேறு​வதை தடுக்க முயற்​சிக்​கிறார். எனினும் ஆம்​புலன்ஸ் வரு​வதற்​குள் சஞ்​சுகு​மார் உயி​ரிழந்​தார். இதுகுறித்து தாலமடகி போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்கின்​றனர்.

இதுகுறித்து அவரது உறவினர்​கள் கூறுகை​யில், “ஆம்​புலன்ஸ் சற்று முன்​ன​தாக வந்​திருந்​தால் சஞ்​சுகு​மாரை காப்​பாற்றி இருக்​கலாம். ஆபத்​தான மாஞ்சா நூல் மூலம் உயி​ரிழப்​பது தொடர்​கதை​யாகி வரு​கிறது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்றார்.

<div class="paragraphs"><p>உயிரிழந்த சஞ்​சுகு​மார் ஹொசமணி</p></div>
அல்​க​ராஸ், அரினா சபலென்கா​வுக்கு ஆஸி. ஓபன் தரவரிசையில் முதலிடம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in