மேகாலயாவில் 10,293 பேருக்கு எச்ஐவி நோய்க்கு சிகிச்சை

மேகாலயாவில் 10,293 பேருக்கு எச்ஐவி நோய்க்கு சிகிச்சை
Updated on
1 min read

ஷில்லாங்: மேகாலயா சட்டப்பேரவையில் எச்ஐவி தொடர்பாக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் டபிள்யூ. ஷில்லா அளித்த பதில் வருமாறு:

இந்தியாவிலேயே மேகாலயாவில் தான் எச்ஐவி பாதிப்பு அதிகம் உள்ளது. மாநிலத்தில் 10,293 பேர் எச்ஐவி தொற்றுக்கான ஆன்டிரெட்ரோ வைரல் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆபத்தான போக்கை சமாளிக்க 5 ஆண்டு திட்டத்துக்கு அரசு ரூ.25 கோடி அனுமதித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் எச்ஐவி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட 749 பேர் இறந்துள்ளனர்.

மேகாலயாவில் எச்ஐவி-க்கு 392 ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் சோதனை மையங்கள் உள்ளன. நான்கு மொபைல் மையங்களும் செயல்பாட்டில் உள்ளன. எச்ஐவி தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மேகாலயாவில் 10,293 பேருக்கு எச்ஐவி நோய்க்கு சிகிச்சை
பிரதமர் மோடி குறித்து அவதூறு: அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய ஐகோர்ட் அமர்வில் மனு தாக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in