“மாணவர் தற்கொலையை அரசியலாக்குகிறார் ராகுல்” - மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

அமைச்சர் தர்மேந்திர பிரதான்

Updated on
1 min read

புதுடெல்லி: காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி, மாணவர் தற்​கொலையை அரசி​ய​லாக்​கு​கிறார் என்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் குற்​றம்​சாட்டி உள்​ளார்.

நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு மற்​றும் தேர்வு மைய குளறு​படி தொடர்​பாக, காங்​கிரஸ் மூத்த தலை​வர் ராகுல் காந்தி தொடர்ந்து மத்​திய அரசை கடுமை​யாக விமர்​சித்து வரு​கிறார். இந்நிலையில், அவர் கடந்த வாரம் ராஜஸ்​தான் மாநிலம் கோட்டாவில் மாணவர்​களு​ட​னான கலந்​துரை​யாடலில் பங்கேற்றார். அப்​போது, கல்​வித் துறை​யில் நில​வும் ஊழலால் மாணவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக குற்​றம் சாட்​டி​னார்.

மேலும் இந்த விவ​காரத்​தில் உச்ச நீதி​மன்​றத்​தின் கண்காணிப்பில் விசா​ரணை நடத்த வேண்​டும் என்​றும் மத்​திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்​டும் என்​றும் காங்​கிரஸ் கோரி​யுள்​ளது.

இந்த சூழலில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தனியார் செய்தி தொலைக்​காட்​சிக்கு நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது: கேள்வி​கள் கேட்க எதிர்க்​கட்​சிகளுக்கு உரிமை உண்​டு. ஆனால் நீட் மறு​தேர்வு நடப்​ப​தற்கு 3 நாட்​களுக்கு முன்​பு, மாணவர்​களை அச்​சுறுத்​தும் வகை​யிலும் அவர்​கள் தேர்​வுக்கு தயா​ராவதை சீர்​குலைக்​கும் வகை​யிலும் கோட்டா நகரில் ராகுல் காந்தி ஒரு நிகழ்ச்​சியை நடத்​தி​னார்.

மே 3ம் தேதி நடந்த நீட் தேர்​வின் வினாத்​தாள் கசிந்​த​தால் ஜூன் 21ம் தேதி நீட் மறு​தேர்வு நடத்​தப்​பட்​டது. தேர்வு முடிந்து 2 நாட்களுக்​குப் பிறகு, இந்த மறு​தேர்வு தோல்​வியடைய வேண்​டும் என்று ராகுல் கூறி உள்​ளார். அதே​போல மாணவர் தற்​கொலை சம்பவங்​களை ராகுல் அரசி​ய​லாக்​கு​கிறார், இதற்கு நான் பொறுப்பேற்​கிறேன். அதே​நேரம், காங்​கிரஸ் கட்சி மாணவர்களின் மரணங்​களை அரசி​யலுக்​குப் பயன்​படுத்​து​வது மட்​டரக​மான அரசி​யல்.

நாக்​பூர் மாணவருக்கு அபு​தாபி​யில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்​ட​தாகக் கூறி ராகுல் கண்​டனம் தெரி​வித்​தார். ஆனால் அந்த மாணவருடைய தந்​தை​யின் வேண்​டு​கோளின் பேரில் ​தான் அந்த மையம் ஒதுக்​கப்​பட்​டது. எனினும், இந்த விவ​காரம் கவனத்துக்​குக் கொண்டு வரப்​பட்​ட​வுடன், தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) மையத்தை நாக்​பூருக்கு மாற்​றியது. அரசி​யல் லாபத்துக்காக மாணவர்​களைத் திசை​ திருப்​புவதை எதிர்க்கட்சிகள்​ நிறுத்​த வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்​.

<div class="paragraphs"><p><em>அமைச்சர் தர்மேந்திர பிரதான்</em></p></div>
போலி சிபாரிசு கடிதங்கள் மூலம் ஏழுமலையான் பக்தர்களிடம் ரூ.4.22 லட்சம் மோசடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in