அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில் இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில்  இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்
Updated on
1 min read

புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலின் 6 சரணங்களும், தேசிய கீதம் ‘ஜன கண மன’ பாடல் பாடுவதற்கு முன்னதாக பாடப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

வந்தே மாதரம் பாடல் இசைக்கப்படுவதற்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஜனவரி 28-ம் தேதி வெளியிட்ட உத்தரவில், ‘அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் தேசிய கீதத்துக்கு முன்னதாக வந்தே மாதரம் பாடலின் 6 சரணங்களும் கட்டாயம் பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும்.

பாடல் இசைக்கப்படும் நேரம் தோராயமாக 3 நிமிடங்கள் 10 விநாடிகள் ஆகும். குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பங்கேற்கும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் வந்தே மாதரம் பாடல் ஒலிக்கப்பட வேண்டும்.

அகில இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சி மூலம் குடியரசுத் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் ஒலிக்கப்பட வேண்டும். அதிகாரப்பூர்வ பதிப்பு மட்டுமே பாட அல்லது ஒலிக்கப்பட வேண்டும். தேசியப் பாடலான வந்தே மாதரம் இசைக்கப்படும் போது அனைவரும் எழுந்து நிற்க மரியாதை செலுத்த வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகளில்  இனி ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம்
“ஊழல் கறை படிந்தவர்களை ஒன்று சேர்த்து தேர்தலை சந்திக்கிறது என்டிஏ” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in