அமித் ஷாவை மிரட்​டும் மம்தா: பாஜக மூத்த தலைவர் புகார்

அமித் ஷாவை மிரட்​டும் மம்தா: பாஜக மூத்த தலைவர் புகார்
Updated on
1 min read

புவனேஸ்​வர்: பாஜக செய்தி தொடர்​பாளர் சம்​பித் பத்ரா புவனேஸ்​வரில் நேற்று அளித்த பேட்​டி​யில் கூறிய​தாவது:

மேற்​கு​வங்​கம் பங்​குரா மாவட்​டத்​தில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் பேசிய முதல்​வர் மம்தா, கொல்​கத்​தா​வில் உள்ள ஓட்​டலில் மத்திய அமைச்சர் அமித் ஷா பதுங்​கி​யிருந்த​தாக​வும், அவர்​கள் நினைத்​திருந்​தால், அமித் ஷாவால் ஓட்​டலை விட்டு வெளியே வந்​திருக்க முடி​யாது என்றும் கூறியுள்ளார்.

இது மத்​திய உள்​துறை அமைச்​சருக்கு விடும் மிரட்​டல் அல்ல. ஒட்​டுமொத்த நாட்டு மக்​களுக்​கும் விடுக்​கும் மிரட்​டல். மேற்கு வங்​கத்​தில் முந்​தைய தேர்​தல்​களின் போது பாஜக தலை​வர் ஜே.பி.நட்டா சென்ற வாக​னம் ஊடுரு​வல்​காரர்​களால் தாக்​கப்​பட்​டது.

மேற்கு வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் குண்​டர்​களால் 300 பாஜக தொண்​டர்​கள் கொல்​லப்​பட்​டனர். இங்கு ஹிட்​லர் ஆட்சி நடை​பெறுகிறது. மேற்கு வங்​கத்​தில் பாஜக 3-ல் 2 மடங்கு பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். இவ்வாறு அவர் கூறினார்.

அமித் ஷாவை மிரட்​டும் மம்தா: பாஜக மூத்த தலைவர் புகார்
பிப்​ரஹ்வா நினை​வுச் சின்​னம்: ஜன.3-ல் கண்​காட்சி தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in