‘ராமகிருஷ்ண பரமஹம்சரை சுவாமி என பிரதமர் கூறுவதா?’ - மம்தா கண்டனம்

‘ராமகிருஷ்ண பரமஹம்சரை சுவாமி என பிரதமர் கூறுவதா?’ - மம்தா கண்டனம்
Updated on
1 min read

கொல்கத்தா: ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்​சரின் பிறந்த தினத்தை முன்​னிட்டு, பிரதமர் மோடி எக்ஸ் தளத்​தில், ”சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்​சரின் பிறந்த நாளில் எனது பணி​வான வணக்​கம் செலுத்​துகிறேன்” என்று குறிப்​பிட்​டார்.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில் கூறி​யிருப்​ப​தாவது: பிரதமர் தனது வாழ்த்து செய்​தி​யில் ராமகிருஷ்ண பரமஹம்​சர் பெயர் முன் சுவாமி என சேர்த்​துள்​ளது அதிர்ச்சி அளிக்​கிறது. ராம கிருஷ்ணரின் மறைவுக்​குப் பின் ராமகிருஷ்ண மடம் மற்​றும் ராமகிருஷ்ணா இயக்​கத்தை நடத்தும் சீடர்​கள்​ தான் இந்​திய பாரம்​பரியப்​படி ‘சு​வாமி’ என அழைக்​கப்​பட்​டனர்.

இவர்​களின் குரு​வான ராமகிருஷ்ணர் ‘தாகூர்’ என்​று​தான் கூறப்படு​கிறார். தாகூர் - மா- ஸ்வாமிஜி என்​பது​தான் இங்கு பின்பற்​றப்​படும் ஒழுங்கு முறை. தாகூர் என்​றால் ராமகிருஷ்ண பரமஹம்​சர். மா என்​றால் அது மாதா சார​தா. சுவாமிஜி என்​றால் அது சுவாமி விவே​கானந்​தர்.

வங்​காளத்​தின் மாபெரும் மகான்​கள் குறித்து தனது கலாச்​சார உணர்​வற்ற தன்​மையை பிரதமர் மீண்​டும் வெளிப்படுத்தியுள்ளார். எனவே, இனி இதுபோன்று கூற வேண்டாம் என பிரதமரை அன்​புடன் கேட்​டுக் கொள்​கிறேன்​. இவ்வாறு மம்​தா கூறி​யுள்​ளார்​.

‘ராமகிருஷ்ண பரமஹம்சரை சுவாமி என பிரதமர் கூறுவதா?’ - மம்தா கண்டனம்
ரூ.10 கோடியில் புனரமைக்கப்பட்ட ஆவண காப்பக கட்டிடம்: உதயநிதி திறந்துவைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in