குறிப்பிட்ட சமூகத்தினரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்: மம்தா குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

Updated on
1 min read

நாடியா: மேற்கு வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் ஏப்​ரல் 23 மற்​றும் ஏப்​ரல் 29 ஆகிய தேதி​களில் 2 கட்டங்​களாக நடை​பெற உள்​ளது. இந்நிலையில், ​மாநிலத்​தில் மேற்​கொள்​ளப்​பட்ட வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​யின்​போது சுமார் 91 லட்​சம் வாக்​காளர்​கள் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​ட​தாகத் தேர்​தல் ஆணைய புள்​ளி​விவரம் கூறுகிறது.

நாடியா மாவட்​டத்​தில் உள்ள சக்​தஹா நகரில் திரிண​மூல் காங்​கிரஸ் சார்​பில் நேற்று நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் மம்தா பானர்ஜி பேசி​ய​தாவது: எஸ்​ஐஆர் பணி​களின்​போது வாக்​காளர் பட்​டியலில் இருந்து திட்​ட​மிட்டு நீக்​கப்​பட்​ட​வர்​களின் பெயரை மீண்​டும் சேர்க்க திரிண​மூல் காங்​கிரஸ் கட்சி முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது.

குறிப்​பாக, இதுகுறித்து உச்ச நீதி​மன்​றத்​தில் முறை​யிடப்​பட்​டது. அதன் பிறகு பெரு​மளவி​லான பெயர்​கள் மீண்​டும் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. குறிப்​பாக, உச்ச நீதி​மன்​றத்​தின் தலை​யீடு காரண​மாக பரிசீலனை​யில் இருந்த சுமார் 60 லட்​சம் பெயர்​களில் சுமார் 32 லட்​சம் பெயர்​கள் மீண்​டும் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

குறிப்​பிட்ட சமூகங்​களைச் சேர்ந்​தவர்​களின் பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து திட்​ட​மிட்டு நீக்​கப்​பட்​டது தெரிய​வந்​துள்​ளது. இந்த நீக்​கங்​கள் தற்​செய​லானவை அல்ல, மாறாக ஒரு குறிப்​பிட்ட குழு​வினரை குறி​வைத்து நடத்​தப்​படு​பவை. இவ்​வாறு மம்தா பானர்ஜி​ தெரி​வித்​தார்​.

<div class="paragraphs"><p>மம்தா பானர்ஜி</p></div>
ஆயிரம் விளக்கு தொகுதியில் அசத்தப் போவது யார்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in