

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், பெல்துர்த்தியை சேர்ந்த சுரேஷ் - புஷ்பலதா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஏப்.12-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குப் பிறந்தது முதலே ‘ஸ்பைனல் மஸ்குலர் அட்ராபி’ (எஸ்எம்பி) எனும் அரிய வகை நோய் இருந்தது.
மேலும் நோய்க்குச் சிகிச்சை அளிக்க தேவைப்படும் ஒரு ஊசியின் மதிப்பு ரூ.16 கோடி எனவும் அந்த மருந்துவெளிநாட்டில் இருந்து வரவழைக்க வேண்டும் என்றும்மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுதொடர்பாக குழந்தை புனர்விகாயின் பெற்றோர் சமூக வலைதளங்கள் மூலம் உதவி கோரினர். இதில் கடந்த ஓராண்டில் ரூ.10 கோடி மட்டுமே வசூலானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆந்திர கல்வித் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஹைதராபாத்தில் அக்குழந்தை கிசிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றார். குழந்தையின் பெற்றோரை நலம் விசாரித்த அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
பிறகு ரூ.6 கோடியை தானே வழங்குவதாக உறுதி அளித்தார். இதையடுத்து வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஊசி மருந்தை நேற்று அவர் நேரில் வழங்கினார். அந்த ஊசி புனர்விகா க்கு செலுத்தப்பட்டது. அப்போதுகுழந்தையின் பெற்றோர் அவருக்கு நன்றி தெரிவித்தனர். பிறகு ‘எக்ஸ்' தளத்தில் “குழந்தை புனர்விகா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” என அமைச்சர் லோகேஷ் பதிவிட்டுள்ளார்.