ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸ் மீது கங்கனா தாக்கு

மக்​களவை எம்​.பி.​ கங்​கனா ரனாவ

மக்​களவை எம்​.பி.​ கங்​கனா ரனாவ

Updated on
1 min read

புதுடெல்லி: இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகு​தி​யைச் சேர்ந்த மக்​களவை எம்​.பி.​யான கங்​கனா ரனாவத் நேற்று வெளியிட்​டுள்ள அறிக்​கையில் கூறியிருப்பதாவது: அயோத்​தி​யில் ராமர் கோயிலே கட்​டக் ​கூ​டாது என்று காங்​கிரஸ் கட்சி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்​பு​ தெரி​வித்தது.

கோயில் கட்​டப்​பட்டு லட்​சக்​கணக்​கான மக்​கள் கோயிலுக்கு வருகை தரு​கின்​றனர். இந்​நிலை​யில் இமாச்சல பிரதேச முதல்​வர் சுக்​விந்​தர் சிங் சுகு, ராமர் கோயில் நன்​கொடை விவ​காரம் குறித்து கேள்வி எழுப்​பி​யுள்​ளார். குறிப்பாக, அயோத்தி ராமர் கோயில் நன்​கொடைகளில் திருட்​டு, முறை​கேடு​கள் நடந்​தது மட்டுமல்​லாமல், லட்​சக் ​கணக்​கான மக்​களின் நம்​பிக்​கை​யும் திருடப்​பட்​டுள்​ளது என்று தெரி​வித்​துள்​ளார்.

முதலில் கோயிலே வேண்​டாம் என்று கூறிய​வர்​கள், இப்​போது அந்தக் கோயிலை வைத்து அரசி​யல் ஆதா​யம் தேடப் பார்க்கின்றனர். பல ஆண்​டு​களாக ராமர் கோயில் கட்டுமானத்தை எதிர்த்து வந்​தது காங்​கிரஸ் கட்​சி. அதே காங்கிரஸ் கட்​சி, தற்​போது கோயில் நன்​கொடை முறை​கேடு விவகாரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் லாபம் அடைய முயல்கிறது.

சனாதனம், கலாச்​சா​ரம், மக்​கள் நம்​பிக்​கை, நாட்​டின் நாகரீகம், பண்​பாட்டை கட்​டிக் காப்​ப​தில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் கூட்​டணி அரசு உறுதி பூண்​டுள்​ளது.வாக்கு வங்கி அரசி​யலுக்​காக பாஜக எப்​போதும் செயல்​ப​டாது. காங்​கிரஸ் கட்சியின் அரசி​யலை​யும், அதன் உண்​மைத்​ தன்​மை​யை​யும் மக்கள் உணர்ந்​து​கொண்டு விட்​டனர்​. இவ்​வாறு கங்​க​னா ரனாவத்​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>மக்​களவை எம்​.பி.​ கங்​கனா ரனாவ</em></p></div>
மின் தடைக்கு தீர்வு காண புதிய திட்டம்: அதிகாரிகளுக்கு மின் வாரிய தலைவர் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in