கும்பமேளா சமயத்தில் ராமர் கோயில் காணிக்கையில் பெரும்பகுதி திருட்டு: மைத்துனர்கள் இருவர் சிக்கினர்

அயோத்தி ராமர் கோயில்

அயோத்தி ராமர் கோயில்

Updated on
1 min read

அயோத்தி: ராமர் கோயில் காணிக்கை திருட்டு குற்​றச்​சாட்டை விசா​ரித்த சிறப்பு புல​னாய்வு குழு​வினர் 8 பேரை கைது செய்துள்ளனர். இவர்​களில் லவ்​குஷ் மிஸ்ரா மற்​றும் அனுகல்ப் மிஸ்ரா ஆகியோர் மைத்​துனர்​கள். இவர்​கள் இரு​வரும் கூட்டு சேர்ந்து காணிக்​கை​யில் அதி​களவி​லான பணத்தை திருடி பல இடங்​களில் சொத்​துக்​களை வாங்கி குவித்​துள்​ளனர். சாதாரண ஊழியர்​களாக இருந்​தவர்​கள் திடீரென புதிய வாக​னங்​கள் வாங்கினர். இவர்​களின் பண பரி​மாற்​றங்​கள் மற்​றும் சொத்துகளை ஆய்வு செய்ய வரு​மானவரித் துறை​யின் உதவியை அயோத்தி போலீ​ஸார் நடத்​தி​யுள்​ளனர்.

கைது செய்​யப்​பட்ட 8 பேரிடம் நடத்​திய விசா​ரணை​யில் கடந்த ஆண்டு கும்​பமேளா நடை​பெற்ற போது, ராமர் கோயிலுக்கு அதி​கள​வில் காணிக்​கைகள் மற்​றும் நன்​கொடைகள் வந்​த​தாக​வும், அப்​போது கோயில் ஊழியர்​கள், வங்கி ஊழியர்​கள் உதவி​யுடன் அதிக பணத்தை எடுத்​த​தாக கூறி​யுள்​ளனர். கோயில் காணிக்​கையை எண்​ணும் பணி ஸ்டேட் பாங்க் ஆப் இந்​தி​யா​விடம் ஒப்​படைக்​கப்​பட்​டுள்​ளது. அவர்​கள் இதற்​காக தனி​யார் நிறு​வனம் ஒன்றை நியமித்​துள்​ளனர்.

ராமர் கோயி​லின் 4 உண்​டியல்​களில் பக்​தர்​கள் போடும் காணிக்​கையை 14 பேர் கொண்ட குழு​வினர் எண்​ணி​யுள்​ளனர். இவர்​களில் 11 பேர் வங்கி ஊழியர்​கள், 3 பேர் ராமர் கோயில் அறக்​கட்​டளை ஊழியர்​கள்.

கைது செய்​யப்​பட்ட குற்​ற​வாளி​களில் அவி​னாஷ் சுக்லா என்​பவர், தான் திருடிய பணத்தை கவுசல்​புரி​யில் தனது சகோ​தரர் அபிஷேக் என்​பவருக்கு சொந்​த​மான யோகா மையத்​தில் வைத்​துள்​ளார். அங்கு போலீ​ஸார் சோதனை நடத்தி 4 பெட்​டிகளில் மறைத்து வைக்​கப்​பட்​டிருந்த ரூ.89 லட்​சத்தை பறி​முதல் செய்​தனர். ராமர் கோயில் அறக்​கட்​டளை​யின் பொதுச் செய​லா​ளர் சம்​பத் ராயின் டிரைவர் டினு யாதவ் வீட்​டில் நடந்த சோதனை​யிலும் ரொக்க பணம் கைப்​பற்​றப்​பட்​டது.

15 நாட்​கள் கால நீட்​டிப்பு

ராமர் கோயில் நன்​கொடை மற்​றும் காணிக்கை முறை​கேடு குறித்த விசா​ரணை விரிவடைவ​தால் சிறப்பு புல​னாய்வு குழுவுக்கு உ.பி. அரசு 15 நாட்​கள் கால நீட்​டிப்பு வழங்​கி​யுள்​ளது.

<div class="paragraphs"><p>அயோத்தி ராமர் கோயில்</p></div>
பெங்களூருவில் இந்தி பெயர்ப்பலகை சேதம்: கன்னட அமைப்பினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in