கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி உயர்​நீ​தி​மன்ற நீதிப​தி​யாக பணி​யாற்​றிய யஷ்வந்த் வர்மா வீட்​டில் கடந்​தாண்டு ஏற்​பட்ட தீ விபத்​தில் எரிந்த நிலை​யில் பண மூட்​டைகள் கைப்​பற்​றப்​பட்​டன. இந்த விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்ய நீதிபதி யஷ்வந்த் மறுத்துவிட்டார்.

இதையடுத்து மக்​களவை​யில் அவர் மீது பதவி நீக்க தீர்​மானம் கொண்​டு​வரப்​பட்டு 3 உறுப்​பினர் கொண்ட விசா​ரணை குழுவை சபா​நாயகர் ஓம் பிர்லா அமைத்​தார். இதே தீர்​மானம் மாநிலங்களவை​யில் நிராகரிக்​கப்​பட்​டது.

இந்நிலையில், சபா​நாயகரின் நடவடிக்​கையை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிபதி யஸ்​வந்த் வர்மா மனுத்​ தாக்​கல் செய்​தார். அதில் விசா​ரணைக்கு குழு அமைத்​தது அரசி​யல்​ சாசனம் மற்​றும் நீதிப​தி​கள் விசா​ரணை சட்​டத்​துக்கு எதி​ரானது என கூறி சபா​நாயகரின் நடவடிக்​கையை ரத்து செய்​யும்​படி நீதிபதி வர்மா கூறியிருந்​தார்.

இந்த மனு மீதான விசா​ரணை நீதிப​தி​கள் திபாங்​கர் தத்தா மற்றும் எஸ்​சி.சர்மா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நேற்று விசாரணைக்கு வந்​தது.

நீதிபதி யஷ்வந்த் வர்மா சார்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் முகுல் ரோத்​தகி, சித்​தார்த் லுத்ரா ஆஜராயினர். மத்​திய அரசின் சார்​பில் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார். இரு தரப்பு வாதங்​களை​யும் பதிவு செய்து கொண்​ட உச்​சநீதி​மன்​றம்​ தீர்ப்​பை மறு தேதி குறிப்​பி​டா​மல்​ ஒத்​தி வைத்​தது.

கட்டு கட்டாக பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சூரியக் கூட்டணியில் ஐக்கியம் ஆவாரா அய்யா? | உள்குத்து உளவாளி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in