ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
Updated on
1 min read

விசாகப்பட்டினம்: ஐஎன்​எஸ் தாராகிரி போர்க்​கப்​பல் பாது​காப்பு அமைச்​சர் ராஜ்​நாத் சிங் முன்​னிலை​யில் நேற்று நாட்​டுக்கு அர்ப்பணித்து வைக்​கப்​பட்​டது.

இந்​தி​யக் கடற்​படை​யின் வலிமையை மேலும் அதி​கரிக்​கும் வித​மாக, நவீனத் தொழில்​நுட்​பத்​துடன் கூடிய ஐஎன்​எஸ் தாராகிரி உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது. விசாகப்​பட்​டினத்​தில் இந்​தப் போர்க்​கப்​பலை கடற்​படை​யில் பாது​காப்​புத் துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் நேற்று இணைத்து வைத்​தார்.

இந்த விழா​வில் கடற்​படை தலை​மைத் தளபதி அட்​மிரல் தினேஷ் குமார் திரி​பா​தி, பாது​காப்​புப் படை தலை​மைத் தளபதி ஜெனரல் அனில் சவு​கான் மற்​றும் கடற்​படை உயர் அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து ​கொண்​டனர்.

மும்​பை​யிலுள்ள மசகான் கப்​பல் கட்​டும் தளத்​தில் கட்​டமைக்​கப்​பட்ட தாராகிரி, ‘மேக் இன் இந்​தி​யா' திட்​டத்​தின் கீழ் உரு​வான 6,670 டன் எடை​யுள்ள வலிமைமிக்க போர்க்​கப்​பலாகும். இதில் பயன்​படுத்​தப்​பட்​டுள்ள 75 சதவீதத்​திற்​கும் அதி​க​மான பாகங்​கள் மற்​றும் தொழில்​நுட்​பங்​கள் உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்​ட​வை. இந்​தத் திட்​டத்​தின் மூலம் 200-க்​கும் மேற்​பட்ட குறு, சிறு மற்​றும் நடுத்தர தொழில் நிறு​வனங்​கள் தாராகிரி உரு​வாக்​கத்​துக்கு பங்​களிப்பு செய்​துள்​ளன.

முந்​தைய வடிவ​மைப்​பு​களைக் காட்​டிலும் முன்​னேறிய தொழில்​நுட்​பத்​தைக் கொண்ட இக்​கப்​பல், ரேடார்​களின் பார்​வை​யில் படா​மல் தப்​பிக்​கும் வசதி​யைக் கொண்​டது. எதிரி நாடு​களின் ரேடார்​களுக்​குத் தெரி​யாமல் கடல் பரப்​பில் ஊடுரு​வித் தாக்​குதல் நடத்​தும் திறன் இந்த கப்​பலுக்கு உண்​டு.

இக்​கப்​பல் அதிவேக​மாக​வும், நீண்ட தூரம் பயணிக்​கும் திறனுடனும் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. ஒலியை விட வேக​மான சூப்​பர்​சோனிக் ஏவு​கணை​கள், நடுத்தர தூர வான் பாது​காப்பு ஏவு​கணைகள் மற்​றும் நீர்​மூழ்​கிக் கப்​பல்​களைக் கண்​டறிந்து அழிக்​கும் கருவி​கள் இதில் உள்​ளன.

போர்க்​களத்​தில் நொடிப் பொழு​தில் முடி​வெடுக்க உதவும் நவீன ‘காம்​பாட் மேனேஜ்மென்ட் சிஸ்​டம்' மூலம் ஆயுதங்​கள் ஒருங்​கிணைக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​தோ-பசிபிக் பிராந்​தி​யத்​தில் மாறிவரும் பாது​காப்​புச் சூழல் மற்​றும் இந்​தி​யா​வின் கிழக்​குக் கடற்​கரைப் பகு​தி​யின் முக்​கி​யத்​து​வத்​தைக் கருத்​தில் கொண்​டு, தா​ராகிரி போர்க்​கப்​பலின் வருகை மிகுந்த முக்​கி​யத்​து​வம்​ பெற்​றுள்​ள​தாக ராஜ் நாத்​ சிங்​ தெரி​வித்​து உள்​ளார்​.

ஐஎன்எஸ் தாராகிரி போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
மால்டாவில் நீதிபதிகள் சிறைவைப்பு சம்பவம்: பின்னணியில் செயல்பட்ட வழக்கறிஞர் விமானத்தில் தப்பிச் செல்லும் முன் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in