

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் முயற்சியாக சுமார் 2 மணி நேரம் பாகிஸ்தான் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தகுந்த பதிலடி தரப்பட்டது. அப்போது தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்பவே, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.