தீவிரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உறுதி

தீவிரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: எந்த வடிவி​லான தீவிர​வாதத்​துக்​கும் இந்​தியா அடிபணி​யாது என்று பிரதமர் மோடி தெரி​வித்​துள்​ளார். கடந்த ஆண்டு ஏப்​ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் தீவிர​வா​தி​கள் தாக்குதல் நடத்திய​தில் 26 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழு​வதும் பெரும் கொந்​தளிப்பை ஏற்படுத்தியது.

இந்​தத் தாக்​குதலின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்​கப்​பட்​டது. இந்த தாக்​குதலில் உயி​ரிழந்​தவர்​களுக்கு மரியாதை செலுத்​திய பிரதமர் நரேந்​திர மோடி எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு இதே நாளில் பஹல்​காமில் நடந்த கொடூர​மான தீவிர​வாதத் தாக்​குதலில் உயி​ரிழந்த அப்​பாவி மக்​களை நினைவு கூர்​கிறேன். அவர்​கள் என்​றும் மறக்​கப்பட மாட்​டார்​கள்.

இந்த இழப்​பைத் தாங்​கிக் கொள்​ளும் பாதிக்​கப்​பட்ட குடும்பத்தினருடன் எனது எண்​ணங்​கள் எப்​போதும் இருக்​கும். ஒரு தேச​மாக, நாம் துக்​கத்​தி​லும் உறு​தி​யிலும் ஒன்​றிணைந்து நிற்கிறோம். எந்த வடிவத்​திலான தீவிர​வாதத்​துக்​கும் இந்​தியா ஒரு​போதும் அடிபணி​யாது. தீவிர​வா​தி​களின் கொடூர​மான திட்டங்​கள் ஒரு​போதும் வெற்றி பெறாது. இவ்​வாறு அவர் கூறியுள்ளார்.

இந்​திய ராணுவ​மும் ஒரு கடுமை​யான எச்​சரிக்​கை​யுடன் இந்த நாளை நினைவு கூர்ந்​தது. ராணுவத்​தின் எக்ஸ் தள பதி​வில், “இந்தி​யா​வுக்கு எதி​ரான செயல்​களுக்​கான பதிலடி உறுதி செய்யப்​பட்​டுள்​ளது. நீதி வழங்​கப்​படும். எப்​போதும்” என்று குறிப்பிடப்​பட்​டுள்​ளது.

‘ஆபரேஷன் மகாதேவ்' குறித்த ஒரு வரைபடத்​தைப் பகிர்ந்​துள்ள ராணுவம், “இது ஒரு காலத்​தின் விஷ​யம் மட்​டுமே. 300 சதுர கி.மீ பரப்​பளவி​லான கடின​மான நிலப்​பரப்​பில், 93 பகல் மற்​றும் இரவுகள் இடை​வி​டாது தேடு​தல் வேட்டை நடத்​தி, 3 தீவிர​வா​தி​கள் கொல்​லப்​பட்​டனர். ஆபரேஷன் சிந்​தூர் தொடர்​கிறது” என்று பதிவிட்​டுள்​ளது.

பஹல்​காம் தாக்​குதலுக்கு பதிலடி​யாக, இந்​திய ராணுவம் கடந்த ஆண்டு மே 7ம் தேதி ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்​கை​யைத் தொடங்​கியது. எல்​லை​யைத் தாண்​டி​யுள்ள (பாகிஸ்​தான்) தீவிரவாதக் கட்​டமைப்​பு​களைக் குறி​வைத்து நடத்​தப்​பட்ட இந்​தத் தாக்குதலில், லஷ்கர்​-இ-தொய்​பா, ஜெய்​ஷ் மற்​றும் ஹிஸ்​புல் முஜாகிதீன் அமைப்​பு​களு​டன் தொடர்​புடைய 9 முக்​கிய ஏவுதளங்கள் அழிக்​கப்​பட்​டன. இதில் 100-க்​கும் மேற்​பட்ட தீவிரவாதி​கள் கொல்​லப்​பட்​டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்​தான் நடத்​திய பதில் தாக்​குதலால் 4 நாட்​கள் சிறிய அளவில் போர் மூண்​டது. பின்​னர் இஸ்லாமாபாத்தின் கோரிக்​கையை ஏற்று மே 10ம் தேதி போர் ​நிறுத்​தம் எட்​டப்​பட்​டது. இதன் தொடர்ச்​சி​யாக, பாது​காப்​புப் படையினர் ‘ஆபரேஷன் மகாதேவ்' மூலம் பஹல்​காம் படுகொலை​யில் நேரடி​யாகத்​ தொடர்​புடைய 3 தீவிர​வா​தி​களைக்​ கண்​டறிந்​து சுட்​டுக்​ கொன்​றனர்​.

தீவிரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: பஹல்காம் தாக்குதல் நினைவு தினத்தில் பிரதமர் மோடி உறுதி
மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் - 152 தொகுதிகளில் தொடங்கியது வாக்குப் பதிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in