இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
Updated on
2 min read

புது டெல்லி: இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. இதனை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி அறிவித்தார். அப்போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா உடன் இருந்தார்.

இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இறுதியானது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று இந்தியா தனது வரலாற்றில் மிகப் பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை முடித்துள்ளது. 213 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலகின் மிகப் பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். இதன்கீழ் மக்களுக்கு உதவும் பல முடிவுகளை நாங்கள் எடுத்துள்ளோம். இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் பரஸ்பர வளர்ச்சிக்கான ஒரு வரைபடமாகும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்தில் வாழும் எட்டு லட்சம் இந்தியர்கள் பெரிதும் பயனடைவார்கள். இன்று ஜனவரி 27, இந்த நாளில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நாடுகளுடன் இந்த சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு உலகளாவிய நன்மைக்கான ஒரு கூட்டாண்மை" என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, “இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் நம்பகமான கூட்டாளர்களாக ஒன்றிணைகின்றன. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை செயல்படுத்தும் வகையில் எங்கள் கூட்டாண்மையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறோம்.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆகும். இன்றைய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஐரோப்பாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அமைதி, உரையாடல் ஆகியவற்றிற்கான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கு நாங்கள் பிரதமர் மோடியை நம்புகிறோம்.

மேலும், உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாக நாம் தலைமைத்துவத்தைக் காட்ட வேண்டும். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுதல் மற்றும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து பசுமை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுதல் போன்ற துறைகளில் இந்தியா அதிக ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என்றார்.

வெளி​நாட்டு கார்​களுக்கு தற்​போது 70 முதல் 110 சதவீதம் வரை வரி விதிக்​கப்​படு​கிறது. தடையற்ற வர்த்தக ஒப்​பந்​தம் அமலுக்கு வரும்போது, இறக்​குமதி வரியை 40% குறைக்க இந்​தியா திட்​ட​மிட்​டுள்​ளது. இதன்மூலம் பிஎம்​டபிள்​யூ, மெர்​சிடஸ் பென்​ஸ், வோக்​ஸ்​வேகன், ரெனால்ட் போன்ற ஐரோப்​பிய நிறு​வனங்​களின் கார்​ விலை குறையும்.

எனினும், இதில் மின்​சார வாக​னங்​கள் முதல் 5 ஆண்​டு​களுக்கு சேர்க்​கப்​ப​டாது. டாடா மோட்​டார், மகிந்​திரா போன்ற உள்​நாட்டு நிறு​வனங்​கள் மின்​சார கார் திட்​டத்​தில் அதி​கம் முதலீடு செய்துள்ளன. இது பாதிப்​படை​யும் என்​ப​தால் 5 ஆண்​டு​களுக்கு பின்பு வெளி​நாட்டு மின்​சார கார்​களுக்​கும் வரி குறைக்​கப்​படும். இந்​தி​யா​வில் ஆண்​டுக்கு 44 லட்​சம் கார்​கள் விற்பனையாகின்றன. இதில் வெளி​நாட்டு கார்​களின் பங்கு 4 சதவீதத்​துக்​கும் குறை​வாக உள்​ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே இறுதியானது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!
Swathi Mutthina Male Haniye: மரணப் பரிசாக வந்த பிரேரனா | திரை தேவதைகள் 02

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in