ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகம்

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகம்
Updated on
1 min read

சண்டிகர்: ​நாடாளு​மன்​றத்​தில் உறுப்​பினர் ஒரு​வரின் கேள்விக்கு ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவ் கடந்த மாதம் அளித்த பதிலில், “நாட்​டிலேயே முதல் முறை​யாக ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் தயாரிப்​புப் பணி நடை​பெறுகிறது. இந்த ரயில் தயா​ரான பிறகு சோதனை முறை​யில் இயக்​கப்​படும்” என கூறப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், ஹரி​யானா அரசு நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், "வடக்கு ரயில்​வே​யின் லட்​சிய திட்​ட​மான ஹைட்​ரஜனில் இயங்​கும் ரயில் தயாரிப்​புப் பணி இறுதி கட்​டத்தை எட்டி உள்​ளது. இந்த ரயில் விரை​வில் அறி​முகம் செய்​யப்பட உள்​ளது. இது ஜிந்த் மற்​றும் சோனிபட் இடையே சோதனை முறை​யில் இயக்​கப்​படும். ஹைட்​ரஜன் ரயிலுக்​காக ஜிந்த் நகரில் நிறு​வப்​பட்​டுள்ள ஹைட்​ரஜன் ஆலைக்கு 11 கேவி சீரான மற்​றும் தடையற்ற மின்​சா​ரம் கிடைக்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது" என கூறப்​பட்​டுள்​ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் விரைவில் அறிமுகம்
உ.பி. வரைவு பட்டியலில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in