அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா சர்மா

பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா சர்மா
Updated on
1 min read

குவாஹாட்​டி: அசாம் முதல்வராக ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றார். அவருடன் மேலும் 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

நடந்து முடிந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்​தலில் பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயகக் (என்​டிஏ) கூட்​ட​ணி, மொத்​தம் உள்ள 126-ல் 101 இடங்​களில் அமோக வெற்றி பெற்​றது. இதில், பாஜக 81 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி மற்றும் அசாம் கன பரிஷத் ஆகியவை தலா 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் மூலம் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியைப் பெற்ற இக்​கூட்​டணி தொடர்ந்து 3-வது முறையாக ஆட்​சி​யைப் பிடித்​தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் குவாஹாட்​டி​யில் நடைபெற்ற என்​டிஏ எம்​எல்​ஏ-க்​கள் கூட்​டத்தில், சட்​டப்​பேரவை கட்​சித் தலை​வ​ராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்ந்​தெடுக்​கப்​பட்​டார். இதையடுத்​து, ஆளுநர் லட்​சுமண் பிரசாத் ஆச்​சார்​யாவை சந்​தித்த ஹிமந்த பிஸ்வா சர்​மா, ஆட்சி அமைக்க உரிமை கோரி​னார். இதை ஏற்​றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்​கு​மாறு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ஹிமந்த பிஸ்வா சர்மா 2-வது முறை​யாக முதல்​வ​ராக இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன், பாஜகவைச் சேர்ந்த ரமேஷ்வர் தெலி, அஜந்தா நியோக் ஆகியோரும், அசாம் கன பரிஷத்தைச் சேர்ந்த அதுல் போரா, போடோலாந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த சரண் போரா ஆகிய 4 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

பவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அசாம் முதல்வராக பதவியேற்றார் ஹிமந்த பிஸ்வா சர்மா
“சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் அதிகம் ஒலிப்பதை உறுதி செய்க” - ஸ்டாலின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in