சமையலில் சச்சரவு: குஜராத் தம்பதியின் 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது!

வெங்​கா​யம், பூண்டு பயன்​படுத்​து​வ​தில் பிரச்​சினை
சமையலில் சச்சரவு: குஜராத் தம்பதியின் 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது!
Updated on
1 min read

அகம​தா​பாத்: குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தைச் சேர்ந்​த தம்பதிக்கு கடந்த 2002-ம் ஆண்டு திரு​மணம் நடந்​துள்​ளது. இந்​நிலை​யில் சுவாமி நாராயணனை வழிபடு​வ​தால் சமையலில் பூண்​டு, வெங்​கா​யத்​தைச் சேர்த்​துக் கொள்​ளாமல் சாப்​பிட்டு வந்​தார் மனை​வி. இவர்​களுக்கு ஒரு குழந்தை உள்​ளது.

அதே நேரத்​தில், கணவரும், அவரது தாயாரும் சமையலில் பூண்​டு, வெங்​கா​யத்தை அடிக்​கடி பயன்​படுத்​தினர். இது தொடர்​பாக, கணவன் - மனைவி இரு​வருக்​கும் இடையே அடிக்​கடி தகராறு ஏற்​பட்டு வந்​தது. இதையடுத்​து, இரு​வருக்​குமே தனித்​தனி​யாக உணவு தயாரிக்​கப்​பட்​டது. அப்​போதும் பிரச்​சினை தீராத​தால், குழந்​தை​யுடன் கடந்த 2007ம் ஆண்டு மனை​வி, தனது தாய் வீட்டுக்​குச் சென்றார்.

இதனால் கடும் மன உளைச்​சலுக்கு ஆளான கணவர், விவாகரத்து கோரி அகம​தா​பாத் குடும்​பநல நீதி​மன்​றத்​தில் 2013ம் ஆண்​டில் மனு தாக்​கல் செய்​தார்.

இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதையடுத்து விவாகரத்து மனுவை விசாரித்த குடும்​ப நல நீதி​மன்​றம், இரு​வருக்​கும் விவாகரத்து வழங்கி உத்​தர​விட்​டது. மேலும், மனை​விக்கு ஜீவ​னாம்​சம் வழங்கவும் கணவருக்கு உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில் விவாகரத்து வழங்​கியது செல்​லாது என அறிவிக்கக் கோரி குஜ​ராத் உயர் நீதி​மன்​றத்​தில் மனைவி மனு தாக்​கல் செய்தார்.

இந்த மனு நீதிப​தி​கள் சங்​கீதா விஷேன், நிஷா தாக்​கூர் ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்தது.

தனது மத உணர்வை கணவர் புண்​படுத்​தி​விட்​டார் என்​றும், விவாகரத்து செல்​லாது என்​றும் அறிவிக்​கக் கோரி மனைவி தனது மனு​வில் குறிப்​பிட்​டார்.

அப்​போது கணவர் தரப்​பில் கூறும்​போது, “பூண்​டு, வெங்​கா​யம் இல்​லாமல் சமைத்த போதும் மனைவி வேண்​டுமென்றே பிரச்​சினை செய்​தார். இது தொடர்​பாக மகளிர் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் அளித்து உள்​ளேன்” என்​றார்.

விவாகரத்தை அப்​போது குடும்​ப நல நீதி​மன்​றத்​தில் எதிர்க்கவில்லை என்று தெரிந்​ததும், மனை​வி​யின் மனுவை குஜராத் உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

மேலும், நிலு​வை​யில் உள்ள ஜீவ​னாம்ச தொகையை தவணை முறை​யில் நீதிமன்றத்​தில் செலுத்​தும்​படி கணவருக்கு நீதிப​தி​கள் உத்தரவிட்டனர்.

பூண்​டு, வெங்​கா​யம் பிரச்​சினை​யால் 23 ஆண்டு மண வாழ்க்கை தற்​போது முடிவுக்கு வந்​து​விட்​டது.

சமையலில் சச்சரவு: குஜராத் தம்பதியின் 23 ஆண்டு கால மண வாழ்க்கை முறிந்தது!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை - ஆதரவும் எதிர்ப்பும் வலுப்பது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in