கோவா தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்த விவகாரம்: விடுதி உரிமையாளர்கள் தாய்லாந்தில் கைது

கைது செய்யப்பட்ட கவுரவ் லூத்ரா, சவுரவு லூத்ரா

கைது செய்யப்பட்ட கவுரவ் லூத்ரா, சவுரவு லூத்ரா

Updated on
1 min read

பனாஜி: தீ விபத்து நடந்த கோவா கேளிக்கை விடு​தி​யின் உரிமை​யாளர்​கள் தாய்​லாந்​தில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். வடக்கு கோவா​வின் அர்​போரா கிராமத்​தில் ‘பிர்ச் பை ரோமியோ லேன்' என்ற கேளிக்கை விடு​தி​யில் கடந்த சனிக்​கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்​பட்​டது. இதில் 25 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்த விடு​தி, சவுரவ் லூத்ரா (40), கவுரவ் லூத்ரா (44) என்ற சகோ​தரர்​களுக்கு சொந்​த​மான​தாகும். இரு​வரும் விபத்து பற்றி அறிந்த ஒரு மணி நேரத்​துக்​குள் அதி​காலை 1.17 மணிக்கு தாய்​லாந்​தின் புக்​கெட் நகருக்கு விமான டிக்​கெட் எடுத்​தனர். கேளிக்கை விடு​தி​யில் சிக்​கிய​வர்​களை மீட்க போலீ​ஸாரும் தீயணைப்புப் படை​யினரும் போராடிக்​கொண்​டிருந்த வேளை​யில் இண்​டிகோ விமானம் மூலம் ஞாயிறு அதி​காலை​யில் இந்​தி​யாவை விட்டு வெளி​யேறினர்.

இவர்​களுக்கு எதி​ராக நீல நோட்​டீஸ் பிறப்​பிக்க சிபிஐ உதவியை கோவா போலீ​ஸார் நாடி​னர். இதையடுத்து சிபிஐ கோரிக்​கையை ஏற்று இன்​டர்​போல் சார்​பில் இரு​வருக்​கும் எதி​ராக நீல நோட்​டீஸ் பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் சவுரவ் லூத்​ரா, கவுரவ் லூத்ரா ஆகிய இரு​வரை​யும் புக்​கெட் நகரில் தாய்​லாந்து போலீ​ஸார் கைது செய்​துள்​ள​தாக கோவா அதி​காரி​கள் நேற்று கூறினர்.

இதுகுறித்து அதி​காரி​கள் மேலும் கூறும்​போது, “லூத்ரா சகோ​தரர்​களுக்கு எதி​ராக இன்​டர்​போல் நீல நோட்​டீஸ் பிறப்​பித்​திருந்த நிலை​யில், இந்​திய அரசின் கோரிக்​கை​யின் பேரில் அவர்​கள் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களை இந்​தி​யா​வுக்கு கொண்டு வரு​வதற்​கான நடவடிக்​கைகள் நடந்து வரு​கின்​றன” என்​றனர்.

பட்​டாசுகளுக்கு தடை ரோமியோ லேன் கேளிக்கை விடுதி வளாகத்​துக்​குள் எலெக்ட்ரிக் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் இதுவே விடுதி தீப்பற்​றியதற்கு காரண​மாக அமைந்​ததாக​வும் முதல்​கட்ட வி​சா​ரணையில் தெரியவந்​துள்​ள​து. இதையடுத்து, சுற்​றுலா நிறு​வனங்​களில் பட்டாசுகள், மத்​தாப்​புக்​கள் மற்​றும் வெடி பொருட்களை பயன்படுத்த மாவட்ட நிர்​வாகம் தடை விதித்​துள்​ளது.

இந்த தடை வடக்கு கோவா முழு​வதும் உள்ள கேளிக்கை விடு​தி​கள், மது​பான விடு​தி​கள், உணவகங்​கள், விருந்​தினர் இல்​லங்​கள், சொகுசு விடு​தி​கள், கடற்​கரை குடில்​கள் உள்​ளிட்ட சுற்​றுலா மற்றும் பொழுது​போக்கு தலங்​கள் அனைத்​துக்​கும் பொருந்​தும் என அந்த உத்​தர​வில் கூறப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கைது செய்யப்பட்ட கவுரவ் லூத்ரா, சவுரவு லூத்ரா</p></div>
யார் இந்த இஷா சிங் ஐபிஎஸ்? - புதுச்சேரியின் ‘ஸ்ட்ரிக்ட்’ காவல் அதிகாரி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in