நள்ளிரவில் பால்கனியில் சிக்கிய இரு நண்பர்கள்: பிளிங்கிட் ஊழியர் மூலம் மீட்பு

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on
1 min read

மும்பை: ம​கா​ராஷ்டிர மாநிலம் புனே நகரில் நள்​ளிர​வில் பால்கனியில் சிக்​கிக் கொண்ட இரு நண்​பர்​கள் நூதன முயற்​சி​யாக பிளிங்​கிட்​டில் பொருள் ஆர்​டர் செய்​தனர். பிறகு டெலிவரி ஊழியர் மூலம் அவர்​கள் மீட்​கப்​பட்​டனர்.

இது தொடர்​பான ஒரு வீடியோவை புனேவை சேர்ந்த மிஹிர் கஹுகர் என்​பவர் பகிர்ந்​துள்​ளார். அவரும் அவரது நண்​பரும் நள்ளிர​வில் வீட்​டின் பால்​க​னிக்கு சென்​றுள்​ளனர். அவர்​களுக்கு பின்​னால் இருந்த கதவு தற்​செய​லாக பூட்​டிக்​கொண்​ட​தால் தாங்கள் பால்​க​னிக்​குள் சிக்​கிக் கொண்​டதை மிக​வும் தாமதமாகவே உணர்ந்​தனர்.

வீட்​டுக்​குள் பெற்​றோர்​கள் உறங்​கிக் கொண்​டிருந்த நிலை​யில் பீதியை ஏற்​படுத்​தாமல் அவர்​களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இதையடுத்து அவர்​கள் வித்​தி​யாச​மான ஒரு முயற்சி​யில் இறங்​கினர். பிளிங்​கிட்​டில் ஒரு பொருள் ஆர்​டர் செய்தனர். இதையடுத்து வீட்​டுக்கு வந்த டெலிவரி ஊழியரிடம் தங்களின் நிலை​மையை விளக்​கினர்.

வீட்​டின் சாவி எங்​குள்​ளது, பிர​தான கதவை எப்​படி திறப்​பது போன்றவற்றை அவருக்கு துல்​லிய​மாக விளக்​கினர். இதன் மூலம் பால்​கனி கதவு திறக்​கப்​பட்​டு, அவர்​கள் இரு​வரும் மீட்​கப்​பட்​டனர். ஜன.5ம் தேதி பகிரப்​பட்ட இந்த வீடியோவை இது​வரை 37 லட்​சம் பேர் பார்த்துள்ளனர்.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
“அன்புமணியுடன் கூட்டணி பேசியது சட்ட விரோதம்” - ராமதாஸ் பாய்ச்சல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in