

பிரதிநிதித்துவப் படம்
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த பாஜக தலைவருமான ஆர்.அசோகா பேசும்போது, "ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை சின்னசாமி மைதானத்தில் நடத்துவதற்கு நாம் அனுமதி தருகிறோம்.
இலவசமாக நீர், மின்சாரம், போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிறோம். ஆனால், கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பதற்கு நமக்கு இலவசமாக டிக்கெட் தருவதில்லை. ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிக்கிறார்கள்" என கூறினார்.
இந்நிலையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறுகையில், "ஆர்சிபி அணியின் ஐபிஎல் போட்டிகளுக்கு தலா 3 டிக்கெட்கள் எம்பி, எம்எல்ஏ.க்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்றார்.