ம.பி.யில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு

ம.பி.யில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

போபால்: ம.பி.​யின் ஜபல்​பூர் மாவட்​டத்​தில் சுற்​றுலா படகு கவிழ்ந்த விபத்​தில் 4 பேர் உயி​ரிழந்​தனர்.

ம.பி.​யின் ஜபல்பூர் மாவட்​டத்​தில் நர்​மதை ஆற்​றில் பார்கி அணை கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த அணை​யில் சுற்​றுலாப் பயணி​களுக்​காக உல்​லாசப் படகு இயக்​கப்​பட்டு வரு​கிறது.இந்​நிலை​யில் நேற்று 31 பயணி​களு​டன் சென்ற இந்​தப் படகு பலத்த காற்று வீசி​ய​தில் நிலை​தடு​மாறி கவிழ்ந்​தது.

படகில் அனு​ம​திக்​கப்​பட்​டதை விட அதிக பயணி​கள் ஏற்​றப்​பட்​டதே விபத்​துக்கு காரண​மாக கூறப்​படு​கிறது.இதுபற்​றிய தகவல் அறிந்த உள்​ளூர் மக்​கள் மற்​றும் அதி​காரி​கள் சம்பவ இடத்​துக்கு விரைந்​தனர். இதையடுத்து நடை​பெற்ற மீட்​புப் பணி​யில் 15 பேர் உயிருட​னும் 4 பேர் சடல​மாக​வும் மீட்​கப்​பட்​டனர். மற்​றவர்​களை தேடும் பணி அங்கு தீவிர​மாக நடை​பெறுகிறது. மீட்​கப்​பட்​ட​வர்​களில் சிலர் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

ம.பி.யில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு
இஸ்ரோ தற்காலிக தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in