இஸ்ரோ தற்காலிக தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு

இஸ்ரோ தற்காலிக தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: மகேந்​திரகிரி​யில் உள்ள இஸ்​ரோ​வின் திரவ உந்து அமைப்​பு​கள் மையத்​தில் தினக்​கூலிகளாகப் பணிபுரி​யும் தற்​காலிக தொழிலா​ளர்​களை நிரந்​தர​மாக்க உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மகேந்​திரகிரி​யில் உள்ள இஸ்​ரோ​வின் திரவ உந்து அமைப்​பு​கள் மையத்​தில் பொருள்​களை ஏற்றி இறக்​கும் தினக்​கூலிகளாக 1991-1997 காலக் கட்​டத்​தில் சேர்ந்து சுமார் 20 ஆண்​டு​களுக்கு மேலாக ஆர். ஐயப்​பன், பி. ஆறு​முகன், ஆர். சண்​முக ரவி, வி. ராஜேஷ் குமார், எஸ். சுயம்​பு, ரவிதுரை, எஸ்​.எம். நீல ராமன் உள்​ளிட்​டோர் பணி​யாற்றி வந்​தனர். இதனிடையே, தற்​காலிக தொழிலா​ளர்​களை நிரந்​தப்படுத்​தும் திட்​டத்தை உரு​வாக்க மத்​திய பணி​யாளர் தீர்ப்​பா​யம் பிறப்​பித்த உத்​தர​வைச் சென்னை உயர் நீதி​மன்​ற​மும் கடந்த 2011-ம் ஆண்​டு, உச்​சநீ​தி​மன்​ற​மும் உறுதி செய்​தது.

ஆனால் மத்​திய அரசு, தொழிலா​ளர்​களை நிரந்​தப்படுத்​தும் திட்​டத்தை உரு​வாக்​கு​வதற்கு பதிலாக மீண்​டும் தற்​காலிக பணியை உரு​வாக்​கியது. இத்​திட்​டத்தை எதிர்த்​துத் தற்​காலிக தொழிலா​ளர்​கள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீட்டு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் விக்​ரம் நாத், சந்​தீப் மேத்தா அடங்​கிய அமர்வு விசா​ரித்து அளித்​துள்ள தீர்ப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:

நாட்​டின் முக்​கிய​மான வளர்ச்​சி​யில் மறை​முக​மாகப் பங்​களிப்பு செய்​யும் தொழிலா​ளர்​களைச் சமவுரிமை​யுடன் முன் மாதிரி​யான பணி அமர்த்​துந​ராகச் செயல்பட வேண்​டிய அரசே பாகு​பாட்​டுடன் நடத்​தக் கூடாது. தொழிலா​ளர்​களை நிரந்​தர​மாக்க வேண்​டும் என்ற உத்​தரவை மத்​திய அரசு ஏற்று நடக்​க​வில்​லை.

இந்த மேல்​முறை​யீடு மனுக்​கள் ஏற்​கப்​படு​கின்​றன. தற்​காலிக தொழிலா​ளர்​களைக் கடந்த 2010, செப்​டம்பர் 9-ம் தேதி தொடங்கி பின்​தே​தி​யிட்டு 4 வாரங்​களுக்​குள் நிரந்​தர​மாக்க மத்​திய அரசுக்கு உத்​தர​விடப்​படு​கிறது. இத்​தீர்ப்பு இஸ்​ரோ​வில் பணி​யாற்​றும் தற்​காலிக தொழிலா​ளர்​கள் அனை​வருக்​கும் பொருந்​தும். பொறி​யாளர்​கள், அறி​விய​லா​ளர்​களின் பங்​களிப்​பால் மட்​டும் இந்​திய விண்​வெளித் திட்​டம் வெற்றி பெற​வில்​லை. உதவிப் பணி​யாளர்​களின் பங்​களிப்​பும் இந்த வெற்​றி​யில் உண்​டு.

பணி அங்​கீ​கார விவ​காரத்​தில் அத்​தகைய பணி​யாளர்​களைப் பாகு​பாட்​டுடன் நடத்​து​வதோ, அலட்​சி​யம் காட்​டு​வதோ, நில​வுக்​கும், அதற்கு அப்பாலும் இந்தியாவைக் கொண்டு சென்ற கூட்டு முயற்சி என்னும் பண்பைக் குலைப்பதாகிவிடும். இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இஸ்ரோ தற்காலிக தொழிலாளரை பணி நிரந்தரம் செய்ய உத்தரவு
‘நெட்வொர்க்' வரைபடத்தில் பிழை: மன்னிப்பு கேட்டது நேபாள ஏர்லைன்ஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in