சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் இருந்த பகுதியில் மொபைல் டவர் முன் விளக்கேற்றி கொண்டாட்டம்

ஆசையாக தொட்டுப் பார்த்த கிராம முதியவர்
மொபைல் டவர் முன்பு குவிந்துள்ள கொண்டபள்ளி கிராம மக்கள்.

மொபைல் டவர் முன்பு குவிந்துள்ள கொண்டபள்ளி கிராம மக்கள்.

Updated on
1 min read

புதுடெல்லி: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டம் பஸ்​தார் பகு​தியில் உள்​ளது கொண்​டபள்ளி கிராமம். தெலங்​கானா - சத்​தீஸ்​கர் மாநிலங்​களின் எல்​லைப் பகு​தி​யில் இந்த கிராமம் அமைந்​துள்​ளது.

இந்த கிராமம் அடர்ந்த வனப்​பகு​தி​யில் உள்​ளது. ஆதி​வாசிகள் அதி​கம் பேர் இங்கு வசிக்​கின்​றனர். இங்கு மாவோ​யிஸ்​டு​களின் ஆதிக்​கம் இருந்​தது. அவர்​களின் ரகசிய கூடாரம் கிராமம் முழு​வதும் இருந்​தது. அவர்​களை மீறி கிராம மக்​களால் ஒன்​றும் செய்ய முடி​யாது.

அவர்​களைப் பற்றி போலீஸுக்கு தகவல் தெரி​விப்​பவர்​களை மாவோ​யிஸ்​டு​கள் சுட்​டுக் கொன்​றனர். இதனால் கிராமத்​தில் மின்​சா​ரம், மொபைல் போன்ற எந்த வசதி​களும் இல்​லாமல் மக்​கள் தனித்து விடப்​பட்​டனர்.

இந்​நிலை​யில், அடுத்த ஆண்டு மே மாதத்​துக்​குள் நாடு முழு​வதும் மாவோ​யிஸ்​டு​களை ஒழிப்​போம். சரணடை​யும் மாவோ​யிஸ்​டு​களுக்கு மறு​வாழ்​வுக்​கான உதவி​கள் செய்​யப்​படும் என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா மற்​றும் மாநில அரசு அறி​வித்​துள்​ளது.

அதன்​படி, ஏராள​மான மாவோ​யிஸ்​டு​கள் சரணடைந்து வரு​கின்​றனர். அவர்​கள் தொழில் செய்ய நிதி​யுதவி அளிக்​கப்​படு​கிறது. பலர் என்​க​வுன்ட்​டரில் கொல்​லப்​பட்​டனர். மேலும், மேம்​பாட்டு பணி​கள் ஒவ்​வொரு கிராம​மாக செய்​யப்​பட்டு வரு​கின்​றன. கூடு​தல் படைகள் பாது​காப்​புக்கு அனுப்​பப்​பட்​டன. சாலை வசதி​கள் ஏற்​படுத்தி தரப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், சத்​தீஸ்​கர் மாநிலத்​தின் பஸ்​தார் பகு​தி​யில் உள்ள கொண்​டபள்ளி கிராமத்​தில், பல ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் முறை​யாக மொபைல் போன் நெட்​வொர்க் வசதி ஏற்​படுத்​தப்​பட்​டது. தங்​கள் மொபைல் போன்​களில் சிக்​னல் கிடைத்​ததும் ஆதி​வாசி கிராம மக்​கள், புதி​தாக அமைக்​கப்​பட்ட மொபைல் போன் டவர் அரு​கில் கூடினர். அங்கு மேள தாளத்​துடன் ஆட்​டம் பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

மேலும், கிராமத்​தில் வசிக்​கும் முதி​ய​வர்​கள், அந்த மொபைல் டவரை ஆசை​யாக தொட்​டுப் பார்த்​தனர். பெண்​கள் பலர் டவர் அரு​கில் விளக்​கேற்றி அதை வழிபட்​டனர். இந்த நடவடிக்கை சுதந்​திர​மாக வாழ முடி​யும் என்ற நம்​பிக்​கையை கிராம மக்​களுக்கு அளித்​துள்​ளது.

பல ஆண்​டு​களுக்​குப் பிறகு முதல் முறை​யாக வெளி​யுல​கத்​துடன் தொடர்பு கொள்​வதற்​கான வழி ஏற்​படுத்தி தரப்​பட்​டுள்​ளது என்று கிராம மக்​கள் உணர்ச்சி வசப்​பட்டு கூறுகின்​றனர். எங்​களுக்​குப் புது வாழ்க்கை கிடைத்​துள்​ளது என்று கிராமத்​தினர் தெரிவிக்​கின்​றனர். இதற்​காக சத்​தீஸ்​கர் முதல்​வர் விஷ்ணு தி​யோ சாய்க்​கு கிராம மக்​கள்​ மனமார்ந்​த நன்​றி தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>மொபைல் டவர் முன்பு குவிந்துள்ள கொண்டபள்ளி கிராம மக்கள்.</p></div>
அமெரிக்காவில் வேலை அனுமதி காலவரம்பை 18 மாதங்களாக குறைத்தார் அதிபர் ட்ரம்ப்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in