‘வாய்ஸ் மெசேஜ்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு

‘வாய்ஸ் மெசேஜ்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு
Updated on
1 min read

அமராவதி: ஆந்​திர தலைநகர் அமராவ​தி​யின் தலைமைச் செயலகத்​தில் இருந்து, மாவட்​டங்​களில் உள்ள அனைத்து அரசு துறை மேல​தி​காரி​களு​டன் காணொலி மூலம் முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார்.

அப்​போது அவர் கூறிய​தாவது: "அரசு சேவை​களை மக்​கள் மிக​வும் சுலப​மாக அறிந்து கொள்​ள​வும், அதன் மூலம் பயனடைய​வும், தங்களு​டைய பிரச்​சினை​களை​யும், புகார்​களை​யும் உடனுக்குடன் தெரிவிக்​க​வும் நாம் நடவடிக்கை எடுக்க வேண்​டும். இதற்​காக ஆன்​லைன் மூலம் மக்​கள் அரசு சேவை​களை விரைவில் பெற்​றுக்​கொள்​ளும் வகை​யில் வழி வகுக்க வேண்​டும்.

இதே​போல் மக்​களு​டன் நேரடி தொடர்பு உள்ள அரசு துறைகளுக்கு ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்​பி​னாலே அவர்​களின் பிரச்சினை​களை அறிந்து அதி​காரி​கள் செயல்பட வேண்​டும். இதற்​காக​வும் விரை​வில் நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்.

ஏற்​கெனவே ‘மனமித்​ரா’ எனும் வாட்ஸ் ஆப் சேவை அமலில் உள்ளது. இதனை மக்​கள் சரிவர பயன்​படுத்தி வரு​கின்​றனர். எழுத, படிக்க தெரி​யாதவர்​கள் கூட தங்​களின் பிரச்​சினை​களை தெரிவிக்க ‘வாய்​ஸ் மெசேஜ்’ திட்​டம் அவசி​யம். இவ்வாறு சந்​திர​பாபு நா​யுடு பேசி​னார்​.

‘வாய்ஸ் மெசேஜ்’ மூலமாக இனி புகார் தெரிவிக்கலாம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு அறிவிப்பு
நீட் வினாத்தாள் கசிவு: கைதான 10 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in