“வாக்காளர்களை அச்சுறுத்தினால்...” - திரிணமூல் வேட்பாளரை கடுமையாக எச்சரித்த போலீஸ் அதிகாரி

“வாக்காளர்களை அச்சுறுத்தினால்...” - திரிணமூல் வேட்பாளரை கடுமையாக எச்சரித்த போலீஸ் அதிகாரி
Updated on
1 min read

கொல்கத்தா: ​மேற்கு வங்​கத்​தில் 142 தொகு​தி​களுக்கு இன்​று தேர்தல் நடை​பெறவுள்​ளது. உத்​தர பிரதேசத்​தைச் சேர்ந்த என்​கவுன்ட்​டர் ஸ்பெஷலிஸ்ட் அஜய் பால் சர்மா. உ.பி.யில் பல ரவுடிகளின் அட்​ட​காசத்தை அடக்கி ஒடுக்​கி​யுள்​ளார். பல சமூக விரோ​தி​களை என்​க​வுன்ட்​டரிலும் சுட்​டுத் தள்​ளி​யுள்​ளார்.

இதனால். உ.பி.​யின் சிங்​கம் என்று வர்​ணிக்​கப்​படு​கிறார். இந்​நிலை​யில் அஜய் பால் சர்​மா, மேற்கு வங்​கத்​தின் தெற்கு 24 பர்​கா​னாஸ் மாவட்​டத்​தி​லுள்ள ஃபல்டா தொகுதி தேர்​தல் கண்​காணிப்​பாள​ராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அண்​மை​யில் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த ஜஹாங்​கீர் கான், தனது தொகு​தி​யில் பிரச்​சா​ரம் செய்து கொண்​டிருந்​தார். அப்​போது, வாக்​காளர்​களை அச்​சுறுத்​தும் வித​மாக ஜஹாங்​கீர் கான் பிரச்​சா​ரம் செய்​த​தாக தெரி​கிறது. அவரது பேச்சு வாக்​காளர்​களை பயமுறுத்​தும் விதத்​தில் இருந்​த​தாக புகார் எழுந்​தது.

இதையடுத்து அங்கு தேர்​தல் கண்​காணிப்பு பணி​யில் ஈடு​பட்​டுள்ள அஜய் பால் சர்மா வீடியோ வெளி​யிட்​டுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது: அவருக்கு (ஜஹாங்​கீர் கானுக்கு) சொல்​லுங்​கள். அவரது ஆட்​களோ அல்​லது ஆதர​வாளர்​களோ தொடர்ந்து வாக்​காளர்​களை அச்​சுறுத்​தும் வித​மாக பேசி​னால் அதற்​கான பலனை அனுபவிக்க வேண்​டி​யிருக்​கும். அதன் பின்​னர் அழு​வ​தாலோ அல்​லது வருத்​தப்​படு​வ​தாலோ எந்த பலனும் இருக்​காது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

ஜஹாங்​கீர் கானை எச்​சரித்து அஜய் பால் சர்மா வெளி​யிட்​டுள்ள வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலானது. இதற்கு பாஜக​வின் தகவல் தொழில்​நுட்​பப் பிரிவு தலை​வர் அமித் மாள​வியா கூறும்​போது, “உத்தர பிரதேசத்​தின் சிங்​கம் அஜய் பால் சர்​மா. இந்த ஜஹாங்​கீர் கான், முதல்​வர் மம்தா பானர்​ஜி​யின் மருமகன் அபிஷேக் பானர்​ஜிக்கு நெருக்​க​மானவர்.

ஜஹாங்​கீர் கானின் குடும்​பத்​தினருக்கு அஜய் பால் சர்​மா, கடுமை​யாக எச்​சரிக்கை விடுத்​து, சூழலைத் தன் கட்​டுப்​பாட்​டுக்கு கொண்டு வரு​வ​தில் சிறிதும் காலம் தாழ்த்​த​வில்​லை. அவருக்கு எனது பாராட்​டு​கள். அஜய் பால் சர்மா விடுத்​துள்ள எச்​சரிக்​கைச் செய்​தி, தெளி​வாக​வும், அதே நேரத்​தில் கம்​பீர​மாக​வும் உள்​ளது. இதனால் சட்​டம் ஒழுங்​கும் நிலை​நாட்​டப்​படும், மேலும் தேர்​தல் செயல்​பாட்​டில் செல்​வாக்கு செலுத்த முயற்​சிப்​பவர்​களுக்​கு இது எச்​சரிக்​கை​தான்​" என்​றார்​.

“வாக்காளர்களை அச்சுறுத்தினால்...” - திரிணமூல் வேட்பாளரை கடுமையாக எச்சரித்த போலீஸ் அதிகாரி
மே. வங்கத்தின் அடுத்த முதல்வர் யார் ? - வெற்றியை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் 5 மாவட்டங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in