தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
Updated on
1 min read

புதுடெல்லி: தலைமை தேர்​தல் ஆணை​யர், தேர்தல் ஆணையர்களை நியமிக்​கும் குழு​வில் பிரதமர், மக்களவை எதிர்க்கட்​சித் தலை​வர் மற்​றும் உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி இடம்பெற்றிருந்தனர்.

இந்​நிலை​யில், கடந்த 2023 டிசம்​பரில் மத்​திய அரசு கொண்டு வந்த சட்​ட​திருத்​தத்​தில், உச்​ச நீ​தி​மன்ற தலைமை நீதிப​திக்கு பதிலாக, பிரதமர் பரிந்​துரைக்​கும் மத்​திய அமைச்​சர் குழு​வில் இடம்பெறுவார் என்ற அம்​சம் சேர்க்​கப்​பட்​டது.

புதிய சட்​டத்​தின்படி தேர்​தல் ஆணை​யர்​கள் நியமிக்​கப்​பட்​டதை ரத்து செய்​யக்​ கோரி, ஜெயா தாக்​குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்​கல் செய்தனர். அந்த மனுக்​களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலை​மையி​லான அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கை விசா​ரித்​தால் ஆதாய முரண் குற்​றச்​சாட்டு எழுமென்று குறிப்​பிட்​டு, விசா​ரணை​யில் இருந்து தலைமை நீதிபதி வில​கி​னார். மேலும் எதிர்​காலத்​தில் தலைமை நீதிபதி அல்​லாத பிற நீதிப​தி​கள் அடங்​கிய அமர்வில் இந்த மனுவை பட்​டியலிட​வும் உத்​தர​விட்​டார்​.

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல்
புதுச்சேரியில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வந்தது: என்டிஏ தொகுதி பங்கீடு அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in