உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிக்காக பிஎல்ஓ-வை தொடர்புகொள்ளுங்கள் சேவை: தேர்தல் ஆணையம் அறிமுகம்

உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிக்காக பிஎல்ஓ-வை தொடர்புகொள்ளுங்கள் சேவை: தேர்தல் ஆணையம் அறிமுகம்
Updated on
1 min read

லக்னோ: உத்தர பிரதேசத்​தில் எஸ்​ஐஆர் பணிக்​காக பிஎல்​ஓ-வை தொடர்​பு​கொள்​ளுங்​கள் என்ற சேவையை தேர்​தல் ஆணை​யம் அறி​முகம் செய்​துள்​ளது.

உத்தர பிரதேசத்​தில் சமீபத்​தில் வெளி​யிடப்​பட்ட வரைவு வாக்​காளர் பட்​டியலி்ல் 12.55 கோடி பேர் இடம்​பெற்​றுள்​ளனர். உயிரிழப்பு, நிரந்​தர​மாக வேறு இடங்​களுக்கு குடிபெயர்ந்​தது, இரண்டு இடங்​களில் பெயர் இருந்​தது ஆகிய காரணங்​களால் 2.89 கோடி பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன. இதில் ஆட்​சேபணை தெரிவிக்​க​வும் புதி​தாக பெயர்​களை சேர்க்​க​வும் வரும் பிப்​ர​வரி 6-ம் தேதி வரை விண்​ணப்​பிக்க அவகாசம் வழங்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், பிஎல்​ஓ-வை தொடர்பு கொள்​ளுங்​கள் என்ற சேவையை தேர்​தல் ஆணை​யம் அறி​முகம் செய்​துள்​ளது.

இது தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட அறிக்​கை​யில், “வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தல், நீக்​குதல் அல்​லது திருத்​தம் உள்​ளிட்ட தகவல்​கள் அல்​லது உதவியைப் பெற, வாக்​காளர்​கள் இப்​போது அந்​தந்த வாக்​குச்​சாவடி நிலை அதி​காரி​யுடன் (பிஎல்ஓ) தொலைபேசி அழைப்பை முன்​ப​திவு செய்​ய​லாம். 48 மணி நேரத்​தில் பிஎல்ஓ தொடர்பு கொண்டு தேவை​யான வழி​காட்​டு​தலை வழங்​கு​வார்’’ என கூறப்​பட்​டுள்​ளது.

உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர் பணிக்காக பிஎல்ஓ-வை தொடர்புகொள்ளுங்கள் சேவை: தேர்தல் ஆணையம் அறிமுகம்
ஐ-பேக் அலுவலகத்தில் சோதனை: உச்ச நீதிமன்றத்தில் மே.வங்க அரசு கேவியட் மனு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in