ஆர்பிஐ அதிகாரிகள் போல் நடித்து முதியவர்களிடம் ரூ.80.50 லட்சம் மோசடி

ஆர்பிஐ அதிகாரிகள் போல் நடித்து முதியவர்களிடம் ரூ.80.50 லட்சம் மோசடி
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாடக மாநிலம் பெங்​களூரு​வைச் சேர்ந்த 74 வயது முதி​ய​வருக்​கு, கடந்த அக்​டோபர் மாதம் 30-ம் தேதி தெரி​யாத எண்​ணில் வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்​துள்​ளது. போனில் பேசி​ய​வர்​கள் தங்​களை ஆர்​பிஐ அதி​காரி​கள் என்​றும் போலீஸ் அதி​காரி​கள் என்றும் அறி​முகம் செய்து கொண்​டுள்​ளனர்.

மேலும், அந்த முதி​ய​வர் போலி ஆதார் எண் மற்​றும் போலி வங்​கிக் கணக்கு மூலம் சட்​ட​விரோதப் பணப் பரிவர்த்​தனை​கள் செய்து மோசடி​யில் ஈடு​பட்​டுள்​ள​தாக​வும் இதுகுறித்து ஆர்​பிஐ அதி​காரி​கள் சரிபார்க்க வேண்​டும் என்​றும் மிரட்டினர். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முதி​ய​வர், அவர்​கள் கூறியபடி பல்வேறு வங்கிக் கணக்​கு​களுக்கு லட்​சக்​கணக்​கில் முதி​ய​வர் பணம் அனுப்பி உள்​ளார்.

முதி​ய​வரின் சகோ​தரி​யின் தபால் அலு​வலக நிரந்தர வைப்பு தொகை​யை​யும் அந்த மோசடி கும்​பல் பறித்​துள்​ளது. மேலும், முதி​ய​வரும் அவரது சகோ​தரி​யும் வெளி​யில் செல்லக் கூடாது என்றும் போலீ​ஸார் மற்​றும் அதி​காரி​கள் தீவிர​மாக கண்​காணித்து வரு​வ​தாகவும் கூறி மிரட்​டி​யுள்​ளனர். முதி​ய​வர்​களிடம் இருந்து அந்த கும்​பல் மொத்​தம் ரூ.80.50 லட்​சம் பணத்தை சுருட்டி உள்​ளது.

அதன்​பிறகு, நவம்​பர் 29-ம் தேதி மீண்​டும் வாட்ஸ் அப் மூலம் வேறு ஒரு எண்​ணில் இருந்து அழைப்பு வந்​துள்​ளது. அதில் பேசி​ய​வர், நீங்​கள் போலீஸ் நிலை​யத்​துக்கு செல்​லுங்​கள் என்று கூறி​யுள்​ளார். அதன்​படி முதி​ய​வரும் போலீஸ் நிலை​யத்​துக்கு சென்றபோது​தான் தாங்​கள் ஏமாற்​றப்​பட்​டது தெரிய வந்​துள்​ளது. இதுகுறித்து போலீ​ஸார் எப்​ஐஆர் பதிவு செய்​து தீவிர வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

ஆர்பிஐ அதிகாரிகள் போல் நடித்து முதியவர்களிடம் ரூ.80.50 லட்சம் மோசடி
“ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை துவம்சம் செய்திருக்க முடியும்” - ராஜ்நாத் சிங் கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in