அமலாக்கத் துறை மீண்டும் சோதனை: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா கைது

பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா

பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா

Updated on
1 min read

புதுடெல்லி: பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று மீண்டும் சோதனை நடத்தி கைது செய்தனர்.

சண்டிகரின் செக்டர் 2-ல் உள்ள பஞ்சாப் தொழில் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோராவின் இல்லத்துக்கு, நேற்று காலை சுமார் 20 வாகனங்களில் சென்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சண்டிகர் தவிர, டெல்லியில் இரண்டு இடங்களிலும், குருகிராமின் உத்யோக் விஹாரில் உள்ள ஹாம்ப்டன் ஸ்கை ரியாலிட்டி நிறுவனத்திலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சஞ்சீவ் அரோராவை அதிகாரிகள் கைது செய்தனர்.

ரூ.100 கோடிக்​கும் அதி​க​மான மதிப்​புள்ள செல்​போன்​களை கொள்​முதல் செய்​த​தாக போலி​யான நிறு​வனங்​களிடம் இருந்து ஜிஎஸ்டி ரசீது பெறப்​பட்​டது தொடர்​பாக அமைச்​சர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, கடந்த ஏப்​ரல் 17-ம் தேதி அரோரா மற்​றும் அவருடன் தொடர்​புடைய நிறு​வனங்​களில் அமலாக்​கத் துறை சோதனை நடத்​தி​யது. இந்​நிலை​யில் மீண்​டும் சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக, ஹாம்ப்​டன் ஸ்கை ரியாலிட்​டி, அரோரா மற்​றும் தொடர்​புடைய நிறு​வனங்​களுக்​குச் சொந்​த​மான ரூ.157.12 கோடி மதிப்​புள்ள அசை​யும் மற்​றும் அசையா சொத்​துகளை அமலாக்​கத் துறை தற்​காலிக​மாக முடக்​கி​யுள்​ளது.

டெல்லி முன்​னாள் முதல்​வர் அர்​விந்த் கேஜ்ரி​வால் தனது எக்ஸ் சமூக வலைதள பதி​வில், ‘‘மேற்கு வங்​கத்​தில் தேர்​தல் முடிந்த நிலை​யில், மோடி பஞ்​சாபில் அமலாக்​கத் துறை சோதனை​களைத் தொடங்​கி​யுள்​ளார். அமலாக்​கத் துறை சோதனை​களுக்​குப் பிறகு ஆம் ஆத்மி மாநிலங்​களவை எம்​.பி. அசோக் மிட்​டல் பாஜக​வில் சேர்ந்​தார். இதே வழி​யில் அரோ​ரா​வுக்கு எதி​ராக சோதனை நடத்​தி​யும் அவர் பாஜக​வில் சேர​வில்​லை. அதனால் அவருக்கு அழுத்​தம் கொடுக்​கும் வகை​யில் மீண்​டும் ஒரு சோதனை நடந்​துள்​ளது’’ என்​று கூறி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>பஞ்சாப் அமைச்சர் சஞ்சீவ் அரோரா</p></div>
பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மம்தா பானர்ஜி அழைப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in