கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி: கீழடி​யில் மேற்​கொள்​ளப்​பட்ட அகழாய்வு முடிவு​கள் தொடர்​பான அறிக்​கையை மத்​திய அரசு விரை​வில் வெளி​யிட வேண்​டும் என்று மாநிலங்​களவை​யில் திமுக எம்​.பி. திருச்சி சிவா வலி​யுறுத்​தி​னார்.

மாநிலங்​களவை​யில் நேற்று பூஜ்யநேரத்​தின்​போது திருச்சி சிவா பேசி​ய​தாவது: தமிழ்​நாட்​டின் மதுரை​யில் உள்ள கீழடி பகு​தி​யில் தொல்​பொருள் ஆராய்ச்​சியை இந்​திய தொல்​பொருள் ஆய்​வுத்​துறை மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த 2013-14-ம் ஆண்டு முதல் இந்த ஆய்​வு​கள் தொல்​பொருள் ஆய்​வாளர் கே.அமர்​நாத் ராமகிருஷ்ணா தலை​மை​யில் நடத்​தப்​பட்டு வந்​தன.

ஆய்வு தொடங்​கிய 2 ஆண்​டு​களி​லேயே அங்கு பழங்​காலத்​தைச் சேர்ந்த 7,500 பொருட்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டுள்​ளன. ஆனால் 2 ஆண்​டு​களி​லேயே கே.அமர்​நாத் ராமகிருஷ்ணா இடமாற்​றம் செய்​யப்​பட்​டார்.

இதையடுத்து கீழடி​யில் ஆய்வு நிறுத்​தப்​பட்​டது. சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வின் பேரில் 2017-ல் மீண்​டும் பணி​கள் தொடங்​கப்​பட்டு அங்கு கூடு​தலாக 15,000 பழங்​காலப் பொருட்​கள் அகழாய்வு மூலம் சேகரிக்​கப்​பட்​டன.

2021-ல் அமர்​நாத் ராமகிருஷ்ணா, சென்னை மண்டல தொல்​பொருள் ஆய்​வுத்​துறை கண்​காணிப்​பாள​ராக பொறுப்​பேற்​ற​போது 988 பக்​கங்​கள் கொண்ட அறிக்​கையை சமர்ப்​பித்​தார். இந்த அறிக்கை பொது​மக்​கள் பார்​வைக்​காக வெளி​யிடப்​படும் என்று மத்​திய அரசு உறுதி அளித்​தது. ஆனால் அவை இது​வரை வெளி​யிடப்​பட​வில்​லை.

இது தமிழ் மக்​கள் தங்​களின் செழு​மை​யான கலாச்​சா​ரம் மற்​றும் பாரம்​பரி​யத்​தைப் புரிந்​து​கொள்​வதற்​கான வாய்ப்பை மறுப்​பது போலாகும். எனவே, கீழடி ஆய்வு முடிவு​கள் தொடர்​பான தொல்​பொருள் ஆய்​வாளரின் அறிக்​கையை உடனடி​யாக வெளி​யிட நடவடிக்கை எடுக்​க வேண்​டும். இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட மாநிலங்களவையில் திமுக எம்.பி. கோரிக்கை
அணுசக்தி மேம்பாட்டு மசோதா நிறைவேற்றம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in