நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் அமளி

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் அமளி
Updated on
2 min read

புதுடெல்லி: ​திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நேற்று கடும் அமளி ஏற்​பட்​டது. மக்​களவை ஒத்​திவைக்​கப்​பட்​டது. மாநிலங்​களவை​யில் இருந்த திமுக எம்​.பி.க்​கள் வெளிநடப்பு செய்​தனர்.

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப விவ​காரத்தை நாடாளு​மன்​றத்​தில் விவா​திக்க கோரி இரு அவை​களி​லும் திமுக கூட்​டணி எம்​.பி.க்​கள் நேற்று ஒத்​திவைப்பு தீர்​மான நோட்​டீஸ் அளித்​தனர். ஆனால் இக்​கோரிக்கை ஏற்​கப்​பட​வில்​லை.

மக்​களவை​யில் திமுக உறுப்​பினர்​களின் கோரிக்​கையை சபா​நாயகர் ஓம் பிர்லா ஏற்க மறுத்​தார். திருப்​பரங்​குன்​றம் விவ​காரம் நீதி​மன்ற விசா​ரணை​யில் உள்​ள​தால் அதை அவை​யில் விவா​திக்க முடி​யாது என்​றார். இதையடுத்து திமுக எம்​.பி.க்​கள் அமளி​யில் ஈடு​பட்​ட​தால் மக்​களவை நண்​பகல் 12 மணி வரை ஒத்​திவைக்​கப்​பட்​டது. இதன் பிறகு மக்​களவை கூடிய​போதும் திமுக எம்​.பி.க்​கள் அமளி​யில் ஈடு​பட்​டனர்.

இதற்​கிடை​யில் திமுக மக்​களவை குழு தலை​வர் டி.ஆர்​.​பாலு பேசுகை​யில், “திருப்​பரங்​குன்​றம் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் சிலர் பிரச்​சினையை உரு​வாக்க விரும்​பினர். வகுப்​பு​வாத சக்​தி​கள் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடுத்து தமிழ்​நாட்​டில் பதற்​றத்தை உரு​வாக்​கி​யுள்​ளன. 2014-ல் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வின் அடிப்​படை​யில் தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. அந்த தீர்ப்பு வகுப்​பு​வாத சக்​தி​களால் நிராகரிக்​கப்​பட்​டுள்​ளது" என்​றார். மேலும் திருப்​பரங்​குன்​றம் வழக்கு விவ​காரத்​தில் உத்​தரவு பிறப்​பித்த தனி நீதிபதி குறித்து சில கருத்​துகளை அவர் தெரி​வித்​தார்.

அமைச்​சர் கண்டனம்: இதற்கு மத்​திய சட்ட அமைச்​சர் கிரண் ரிஜிஜு​வும் கண்​டனம் தெரி​வித்​தார். தொடர்ந்து அவர் பேசும்போது, "நீங்கள் சொல்வதை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால் நீங்கள் நீதித்துறைக்கு எதிராகப் பேச முடியாது. இது முன்னெப்போதும் இல்லாதது. ஒவ்வொரு உறுப்பினரும் அவர்கள் விரும்பியதை பேச அனுமதித்தால், அவை இயங்க முடியாது” என்று அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதி குறித்து டி.ஆர்.பாலு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கண்​டனம் தெரி​வித்து பேசும்​போது. "மக்​கள் கோயிலுக்​குச் சென்று விளக்​கேற்​றலாம் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்​பளித்​துள்​ளது. ஆனால், காவல்​துறை அந்த மக்​களை தாக்க முயன்​றது. நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் பக்​தர்​களுக்கு தமிழக அரசு போலீஸ் பாது​காப்பை வழங்​க​வில்​லை. பக்​தர்​களை அனு​ம​திக்​க​வும் இல்​லை. தமிழக காவல்​துறை திமுக​வின் ஏவல் துறை​யாக இயங்கி வரு​கிறது" என்​றார்.

பாசிச போக்கு: பாஜக எம்​.பி. தேஜஸ்வி சூர்யா கூறும்​போது, "முதல்​வர் ஸ்டா​லினின் இந்த நடவடிக்கை ஜனநாயகமற்​றது, பாசிச போக்கு கொண்​டது. தமிழக பாஜக மற்​றும் எதிர்க்​கட்​சித் தலை​வர்​களை கைது செய்த நடவடிக்​கை, திமுக​வின் ஜனநாயக விரோத போக்கை காட்​டு​கிறது. தமிழக மக்​கள் இந்த பாசிச அரசாங்​கத்தை வெளி​யேற்​றி, மாற்​றம் கொண்​டுவர உறு​தி​யாக உள்​ளனர்" என்​றார்.

மாநிலங்​களவை​யில் திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் திமுக உறுப்​பினர்​களின் ஒத்​திவைப்பு தீர்​மான நோட்​டீஸுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்​ட​தால் தி​முக கூட்​டணி எம்​.பி.க்​கள் தொடர்​ முழக்​கம்​ எழுப்​பினர்​. பிறகு அவர்​கள்​ வெளிநடப்​பு செய்​தனர்​.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக கூட்டணி எம்.பி.க்கள் அமளி
இண்டிகோ விமான சேவை ரத்து எதிரொலி: டெல்லி - சென்னை டிக்கெட் விலை ரூ.80,000 ஆக உயர்வு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in