நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக‌ அவகாசம் வேண்டும்: டி.கே.சிவகுமார் கோரிக்கை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக‌ அவகாசம் வேண்டும்: டி.கே.சிவகுமார் கோரிக்கை
Updated on
1 min read

புதுடெல்லி / பெங்களூரு: காங்​கிரஸ் ஆதரவு பத்​திரி​கை​யான நேஷனல் ஹெரால்டு நிறு​வனத்​தின் சொத்​துகள் காங்​கிரஸ் கட்​சி​யின் யங் இண்​டியன் அறக்​கட்​டளைக்கு மாற்​றப்​பட்​ட​தில் நிதி மோசடி நடந்​த​தாக புகார் எழுந்​தது. இதுகுறித்து டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸாரும், அமலாக்​கத் துறை அதி​காரி​களும் கடந்த 2022-ம் ஆண்டு வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரிக்கின்​றனர்.

இந்​நிலை​யில் டெல்லி பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கடந்த 6-ம் தேதி கர்​நாடக துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாருக்​கு, டிசம்​பர் 15-ம் தேதிக்​குள் ஆஜராகு​மாறு நோட்​டீஸ் அனுப்​பினர். விசாரணைக்கு ஆஜராவதற்கு நேற்று முன்​தினம் அவர் பெங்​களூரு​வில் இருந்து டெல்​லிக்கு சென்​றார்.

இதுகுறித்து டி.கே.சிவகு​மார் நேற்று டெல்​லி​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நேஷனல் ஹெரால்டு வழக்​கில் ஆஜராகு​மாறு டெல்லி போலீஸ் அனுப்​பிய சம்​மன் தொடர்​பாக எனக்கு சில சந்​தேகங்​கள் உள்​ளன. எனக்கு வழங்​கப்​பட்ட சம்​மனில் வழக்​கின் முதல் தகவல் அறிக்கை இணைக்​கப்​பட​வில்​லை. எனவே முதல் தகவல் அறிக்​கை​யின் நகலை கேட்​டுள்​ளேன்.

எனவே விசா​ரணைக்கு ஆஜராவ​தில் இருந்து ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்​டும் என கோரி​யுள்​ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக‌ அவகாசம் வேண்டும்: டி.கே.சிவகுமார் கோரிக்கை
தொகுதி மேம்பாட்டு நிதியில் லஞ்சம் பெற்றதாக புகார்: ராஜஸ்தானில் 3 எம்எல்ஏ.க்கள் பதவிக்கு சிக்கல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in