சித்தராமையாவுக்கு விருந்து அளித்து உபசரித்த டி.கே.சிவகுமார்: இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூட்டாக பேட்டி

சித்தராமையாவுக்கு விருந்து அளித்து உபசரித்த டி.கே.சிவகுமார்: இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூட்டாக பேட்டி
Updated on
1 min read

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் பதவி விவகாரத்தில் சித்​த​ராமை​யா​வுக்​கும், டி.கே.சிவகு​மாருக்​கும் இடையே மறை​முக போட்டி நிலவி வரு​கிறது. இந்​நிலை​யில் துணை முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று காலை​யில் முதல்​வர் சித்​த​ராமை​யா​வுக்கு தனது இல்​லத்​தில் விருந்து அளித்​து, உபசரித்து இரு​வரும் ஒற்​றுமை​யாக இருப்​ப​தாக தெரி​வித்​தார்.

கர்​நாடக முதல்​வ​ராக சித்​த​ராமையா பொறுப்​பேற்று இரண்​டரை ஆண்​டு​கள் ஆனதை தொடர்ந்து துணை முதல்​வர் டி.கே.சிவகு​மாருக்கு முதல்​வர் பதவியை வழங்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் போர்க்​கொடி தூக்​கி​யுள்​ளனர். டி.கே.சிவகு​மாரும் மறை​முக​மாக அதற்​காக காய் நகர்த்தி வந்​தார். இதனால் கர்​நாடக அரசுக்கு கடும் நெருக்​கடி ஏற்​பட்​டது.

இதனால் காங்​கிரஸ் மேலிடம் இரு​வரை​யும் தொடர்​பு கொண்​டு, ஒற்​றுமை​யாக இருக்​கு​மாறு வலி​யுறுத்​தி​யது. இதைத்​தொடர்ந்து கடந்த சனிக்​கிழமை சித்​த​ராமையா தனது இல்​லத்​தில் டி.கே.சிவகு​மாருக்கு காலை விருந்து அளித்து உபசரித்​தார். அப்​போது இரு​வரும் இணைந்து கர்​நாடக அரசை வழிநடத்​தப் போவ​தாக தெரி​வித்​தனர்.

இந்​நிலை​யில் டி.கே.சிவகு​மார் நேற்று காலை​யில் சதாசிவ நகரில் உள்ள தனது இல்​லத்​துக்கு முதல்​வர் சித்​த​ராமை​யாவை காலை விருந்​துக்கு அழைத்​தார். இதையடுத்து அவரது இல்​லத்​துக்கு சென்ற சித்​த​ராமை​யாவை வரவேற்ற டி.கே.சிவகு​மாரின் சகோ​தரர் டி.கே.சுரேஷ் காலில் விழுந்து வணங்​கி​னார். காலை விருந்​துக்கு பின்​னர் சித்​த​ராமை​யா​வும், டி.கே.சிவகு​மாரும் சுமார் அரை மணி நேரம் தனி​யாக ஆலோ​சனை நடத்​தினர்.

பின்​னர் இரு​வரும் இணைந்து செய்​தி​யாளர்​களை சந்​தித்​தனர். அப்​போது டி.கே.சிவகு​மார் கூறுகை​யில், ‘‘நானும் முதல்​வர் சித்​த​ராமை​யா​வும் இணைந்து ஒற்​றுமை​யாக இருக்​கிறோம். க‌ர்​நாடக மக்​களுக்கு அளித்த அனைத்து வாக்​குறு​தி​களை​யும் நிறைவேற்​று​வது குறித்து ஆலோ​சித்​தோம். இரு​வருக்​கும் இடை​யில் எந்த மோதலும் இல்​லை. 2028-ம் ஆண்டு நடை​பெறும் சட்​டப்​பேரவை தேர்​தலில் மீண்​டும் காங்​கிரஸை வெற்றி பெறச் செய்​வது தொடர்​பாக ஆலோ​சித்​தோம்’’ என தெரி​வித்​தார்.

இரு தலை​வர்​களின் அடுத்​தடுத்த சந்​திப்​பின் காரண​மாக கர்​நாடக அரசி​யலில் நில​விய பரபரப்பு குறைந்​துள்​ளது.

சித்தராமையாவுக்கு விருந்து அளித்து உபசரித்த டி.கே.சிவகுமார்: இருவரும் ஒற்றுமையாக இருப்பதாக கூட்டாக பேட்டி
சஞ்சார் சாத்தி செயலி கட்டாயம் இல்லை: எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்திய அமைச்சர் சிந்தியா விளக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in