டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்

போலீஸார் விசாரணையில் தகவல்
டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: டெல்லி செங்​கோட்டை அருகே நடை​பெற்ற கார் குண்​டு​வெடிப்பு சம்​பவத்​தில் தொடர்​புடைய மருத்​து​வர்​கள், அப்​பாவி மக்​கள் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்​டு​களை தீவிர​வாத தொடர்​புக்கு பயன்​படுத்​தி​யது விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

டெல்லி செங்​கோட்டை அருகே கடந்​தாண்டு நவம்​பர் 10-ம் தேதி நடை​பெற்ற கார் குண்டு வெடிப்​பில் 15 பேர் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலில், ஈடு​பட்ட மருத்​து​வர்​கள், பாக். தீவிர​வா​தி​களு​டன் பேச அப்​பாவி மக்​களின் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்​டு​களை பயன்​படுத்​தி​யுள்​ளனர். வாட்ஸ் ஆப், டெலிகி​ராம் போன்ற செயலிகள் மூலம் இவர்​களின் தகவல் தொடர்பு நடை​பெற்​றுள்​ளது.

இதையடுத்து வாட்ஸ் ஆப், டெலிகி​ராம் மற்​றும் சிக்​னல் போன்ற தகவல் தொடர்பு செயலிகள், செயல்​பாட்​டில் உள்ள சிம் கார்​டுடன் இணைந்​திருக்க வேண்​டும் என தொலை தொடர்​புத்​துறை உத்​தர​விட்​டது.

குண்டு வெடிப்பு சம்​பவத்​தில் கைது செய்​யப்​பட்ட மருத்​து​வர்​கள் முசமில் கானே, அதீல் ரேத்​தர், உமர் உட்பட பலர் பாது​காப்பு ஏஜென்​சிகளிடம் இருந்து தப்​பிக்க ஒன்​றுக்​கும் மேற்​பட்ட போன்​களை பயன்​படுத்​தி​யுள்​ளனர். இவற்​றில் ஒரு போனில் அவர்​கள் பெயரில் வாங்​கப்​பட்ட சிம் கார்டு பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அந்த போனை தனிப்​பட்ட மற்​றும் அலு​வலக தொடர்புக்கு பயன்​படுத்​தி​யுள்​ளனர். தீவிர​வாத தகவல் தொடர்​புக்கு மற்​றொரு போனை பயன்​படுத்​தி​யுள்​ளனர். இதன் சிம் கார்​டு​கள், அப்​பாவி மக்​களின் ஆதார் கார்​டு​களை தவறாக பயன்​படுத்தி வாங்​கப்​பட்​டுள்​ளன. சிலர் போலி ஆதார் அட்​டைகளை பயன்​படுத்​தி​யும் சிம் கார்​டு​களை பெற்​றுள்​ளனர். சில தகவல் செயலிகள் சிம் கார்டு இல்​லா​மாலும் செயல்​படு​கின்​றன. அதன் மூல​மாக இவர்​கள் வெடிகுண்டு தயாரிப்பை கற்​றுள்​ளனர்.

இதையடுத்து செயல்​பாட்​டில் உள்ள சிம் கார்டு பொருத்​தப்​பட்ட செல்​போன்​களில் மட்​டும் தகவல் தொடர்பு செயலிகள் இயங்​கு​வது உறுதி செய்​யப்பட வேண்​டும் என தகவல் தொடர்பு நிறு​வனங்​களுக்​கு, தொலை தொடர்​புத்​துறை உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. சிம் கார்​டு​கள் இல்​லாமல் தகவல் தொடர்பு செயலிகளை பயன்​படுத்​தும் அம்​சம் தவறாக பயன்​படுத்​தப்​படு​வ​தால், இது தொலை​தொடர்பு சைபர் பாது​காப்புத்துறைக்கு சவாலாக உள்​ளது. வெளி​நாடு​களில் இருந்​தும் சைபர் மோசடி​யில் ஈடு​பட​வும் இந்த அம்​சம் உதவு​கிறது.

தொலை தொடர்பு துறை​யின் இந்த உத்​தர​வு, ஜம்மு காஷ்மீரில் விரை​வாக அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. முறை​கே​டாக பெறப்​பட்ட சிம்​கார்​டு​கள் எல்​லாம் செயலிழக்​கம் செய்​யப்​படு​கின்​றன. தொலை​தொடர்பு சைபர் பாது​காப்பு வி​தி​முறை​களை பின்​பற்​ற​வில்லை என்​றால் நடவடிக்கை எடுக்​கப்​படும் எனவும்​ எச்​சரிக்​கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பில் தொடர்புடைய மருத்துவர்கள் அப்பாவிகள் பெயரில் சிம் கார்டுகள் வாங்கி பயன்படுத்தியது அம்பலம்
பாஜகவுடன் அதிமுக கூட்டணியின் பலன்: ஜெயலலிதா பிறந்த நாளுக்கு நினைவு நாணயம்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in